ஆப்நகரம்

புதிய போன் விளம்பரத்திற்காக ’சாம்சங்’ செய்த செயல்; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

கோலாலம்பூர்: சாம்சங் நிறுவனம் புதிய போன் விளம்பரத்திற்காக செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 5 Dec 2018, 4:06 pm
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் உலக அளவில் சாம்சங் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸ்மார்ட்போன்கள், டிவி உள்ளிட்ட ஏராளமான சாதனங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
Samayam Tamil Samsung


இந்நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது விளம்பரம் ஒன்றில் மாட்டிக் கொண்டது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலுக்காக மலேசியாவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலின் கேமராவின் உயர் தரம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது டி.எஸ்.எல்.ஆர் கேமராவில் எடுக்கப்பட்டது என்று அதை எடுத்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சாம்சங் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்