ஆப்நகரம்

20 பேரின் உயிரை காப்பாற்றிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

எல்லா ஸ்மார்ட்போன்களும் செயலற்று கிடந்த நிலையில், சாம்சங் மட்டும் இருந்ததால் 20 பேரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 23 Jul 2019, 5:36 pm
பிலிப்பைன்ஸ் நாட்டில் சாம்சங் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன் மூலம், 20 பேரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil samsung s8


பிலிப்பைன்ஸ் நாட்டில் சிபு மாகாணத்தில் சிறிய தீவு பகுதி அருகே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இதில் 16 பேர் வெளிநாட்டினரும், 4 பேர் உள்நாட்டினரும் ஆவர். இந்த நிலையில், படகு சென்று கொண்டிருக்கும் போது, திடீரென்று தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். உதவிக்கு அருகில் யாரும் இல்லை. இதையடுத்து பயணிகள் தங்களது செல்போனை எடுத்து போன் போட முயன்றனர். ஆனால், செல்போன்கள் எல்லாம் நீரில் மூழ்கியதால், அவை அனைத்தும் செயலிழந்து போனது.

இதையும் படிங்க:

இந்த இக்கட்டான சூழலில் ஜிம் எம்டி என்ற கனடா நாட்டைச் சேர்ந்தவரும் தனது செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அவர் வைத்திருந்தது சாம்சங் எஸ்8 ஸ்மார்ட்போன் ஆகும். நல்ல வேளையாக அந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் போனாகும்.

இதனால் நீரில் மூழ்கிய போதும், எந்தவித தங்குதடையின்றி சாம்சங் எஸ் 8 நன்றாக வேலை செய்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர், அவசர உதவிக்கு போன் போட்டு நிலைமையை எடுத்துக் கூறினார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர், நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். எல்லா ஸ்மார்ட்போன்களும் செயலிழந்த நிலையில், சாம்சங் எஸ் 8 போன் மட்டும் நன்றாக இயங்கியதால், அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்

இதையும் படிங்க:

அடுத்த செய்தி

டிரெண்டிங்