ஆப்நகரம்

நிலவிற்கு முதல் சுற்றுலா பயணம்; ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

நிலவிற்கான தனது முதல் சுற்றுலா பயணம் குறித்து வரும் திங்கள் அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 12:07 pm
வாஷிங்டன்: நிலவிற்கான தனது முதல் சுற்றுலா பயணம் குறித்து வரும் திங்கள் அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளது.
Samayam Tamil Moon Travel


நிலவிற்கு முதன் முதலில் அமெரிக்கா மனிதர்களை அனுப்பியது. அங்கு முதலில் காலடி எடுத்து வைத்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி, ஆய்வுகள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சந்திரனின் உட்புறத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவிற்கான சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், நிலவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல் முறையாக தனி நபரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவர் BFR ராக்கெட் மூலம், நிலவைச் சுற்றி வருவார். இதன்மூலம் விண்வெளிக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற அன்றாட மனிதர்களின் கனவு அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.

நிலவிற்கு செல்லும் முதல் நபர் யார், ஏன் செல்கிறார் என்ற தகவல் வரும் திங்கள், செப்டம்பர் 17ல் அறிவிக்கப்படும். நிலவிற்கு இதுவரை 24 பேர் பயணித்துள்ளனர். கடந்த 1972ஆம் ஆண்டு அப்போலோ மிஷனிற்கு பிறகு, யாரும் நிலவிற்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

SpaceX to announce passenger for private moon flight.

அடுத்த செய்தி

டிரெண்டிங்