ஆப்நகரம்

விவசாயிகளுக்கு உதவும் செயலியை அறிமுகம் செய்த பிரபல டிராக்டர் நிறுவனம்

விவசாய துறைக்கு நவீன வகையில் உதவும் புதிய செயலியை பிரபல டிராக்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சோதனை ரீதியாக இந்த செயலி தற்போது வடஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது

Samayam Tamil 24 Sep 2018, 4:37 pm
உற்பத்தி பொருட்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட விவசாய துறைக்கு பல்வேறு வகையில் பயன் தரும் புதிய செயலியை பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான ‘டாஃபே’ அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil kerala_agriculture
விவசாயத்துறைக்கு பயனளிக்கும் புதிய செயலி அறிமுகம்


இந்தியாவில் டிராக்டர் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ’டாஃபே’. விவசாய நலன் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை தனது சி.எஸ்.ஆர் (சமூக பொறுப்புணர்வு திட்டம்) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வருகிறது.

தற்போது இந்நிறுவனம், 'J Farm Services App' என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்து கொள்ளும் வசதி, விவசாயத்திற்குரிய வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் வசதி, விவசாயக் கருவிகளின் பயன்பாடு தொடர்பான விவரங்கள் பெறும் வசதி என பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த செயலி குறித்து பேசிய டாஃபே நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன், விவசாய துறையில் ஏற்பட்டுள்ள பல மேம்பாட்டு பணிகளை இந்த 'J Farm Services App' வழங்கும். மேலும் மற்ற விவசாயிகளிடமிருந்து டிராக்டர், விதைப்பு இயந்திரம், அறுவடை இயந்திரங்களை வாடகைக்குப் பெற முடியும் என்று தெரிவித்தார்.

தற்போது சோதனை ரீதியாக டாஃபே நிறுவனத்தின் செயலி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிரது. அங்கியிருக்கும் சுமார் 60 ஆயிரம் விவசாயிகள் 'J Farm Services App' குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் தென்னிந்தியா உட்பட, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் டாஃபே நிறுவனத்தின் இந்த புதிய் செயலி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிரபர்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்