ஆப்நகரம்

மணல் கொள்ளையர்களை காட்டிக் கொடுக்கும் கூகுள் மேப்

தமிழகத்தில் ரூ.505.30 கோடி மதிப்பிலான மணல் கொள்ளையைக் கண்டுபிடிக்க கூகுள் மேப் உதவியுள்ளது.

Samayam Tamil 10 Jul 2018, 3:57 pm
தமிழகத்தில் ரூ.505.30 கோடி மதிப்பிலான மணல் கொள்ளையைக் கண்டுபிடிக்க கூகுள் மேப் உதவியுள்ளது.
Samayam Tamil 64925936


அண்மையில் கரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள மணல் கொள்ளையைக் கண்டுப்பிடித்துத் தடுப்பதற்கு கூகுள் மேப் பெரிதும் உறுதுணையாக உள்ளது.

கடலூர் அருகே உள்ள நெய்வாசலில் உள்ள மணல் குவாரியில் மணல் அள்ளுமவது வரம்பு மீறி அரியலூர் மாவட்டம் சந்நாசிநல்லூர் வரையில் நீண்டுள்ளதை பொதுப்பணித்துறையின் மணல் கொள்ளை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இதற்கான ஆய்வை மணல் கொள்ளை தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தியுள்ளனர்.

நெய்வாசல் கிராமத்தில் 19 ஹெக்டேரில் மட்டும் மணல் குவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் மேப் மூலம் அட்ச ரேகை மற்றும் தீர்க்க ரேகையைக் கொண்டு பார்த்தபோது வரம்பு மீறி மணல் கொள்ளை விரிவடைந்துள்ளதை அறிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் 4.23 ஹெக்டோர் ஆற்றுப்படுகை பகுதியும் மற்றவை தனியார் பட்டா நிலங்களும் உள்ளன. நெய்வாசலில் இருந்து சந்நாசிநல்லூர் வரை 13.34 லட்சம் கன மீட்டர் மணல் அள்ளப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு 1.9 லடசம் கன மீட்டர் மட்டுமே.

இதன்படி அனுமதி பெறாமல் அள்ளி கடத்தப்பட்ட மணலின் மதிப்பு ரூ.505.30 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் கணிக்கின்றனர்.

2014-15 முதல் 2016-17 வரை கடலூர் மாவட்டத்தில் ரூ.3.11 லட்சம் மதிப்பிலான மணல் கடத்தல் முயற்சிகளை தடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைத்த அபாரதத் தொகையாக ரூ.1.75 கோடி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், சுமார் 11.44 லட்சம் கன மீட்டர் மணல் அதிகாரிகளால் தடுக்க முடியாமல் கொள்ளை போயிருப்பது கூகுள் மேப் உதவியால் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்