டிராய் என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வருகிற மார்ச் 1 ஆம் தேதியன்று டிடிஎச் ஆப்ரேட்டர்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தவுள்ளது.
நீதிமன்றங்களை அணுகிய டிடிச் ஆபரேட்டர்கள்; ஏன்?
தேசிய கட்டண ஆணை (என்.டி.ஓ) 2.0-வின் ஒரு பகுதியாக, ஜனவரி 15 தேதிக்குள் புதிய சேனல் விலைகளை அறிவிக்குமாறு ஒளிபரப்பாளர்களை ட்ராய் கேட்டுக்கொண்டது.
இருப்பினும், ஒளிபரப்பாளர்கள் அந்தந்த உள்ளூர் நீதிமன்றங்களை என்.டி.ஓ 2.0-விற்கு எதிராக அணுகினர். இது சார்ந்த பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, இந்த வழக்குகள் அடுத்ததாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ரூ.20,000-க்குள் இந்த 5 ஸ்மார்ட்போன்களை விட "பெஸ்ட் போன்" ஒன்னு இருந்தா நீங்களே சொல்லுங்க!
ஆக பிப்ரவரி 12 என்ன நடக்கும்?
ஆக பிரபல டிடிஎச் ஆபரேட்டர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் சன் டைரக்ட் ஆகியவைகள் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் புதிய திட்டங்களை கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.டி.எச் ஆபரேட்டர்களுடன் இணைந்து கேபிள் டிவியும் அதே நாளில் புதிய திட்டங்களைக் கொண்டு வரலாம்.
டிராய் போட்ட திட்டம் தான் என்ன?
ஒளிபரப்பாளர்கள் தங்களது புதிய விலைகளை 2020 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அறிவித்திருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தங்களது புதிய விலைகளை அறிவித்திருக்க வேண்டும். பின்னர் இந்த புதிய விலைகள் மார்ச் 1, 2020 க்குள் செயல்படுத்தப்படவிருந்தன.
அறிமுகமானது Samsung Galaxy A01; சியோமி & ரியல்மி சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!
தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?
தீர்ப்பு டிராய்-க்கு ஆதரவாக வந்தால், ஒளிபரப்பாளர்கள் டிராய் பரிந்துரைத்த திருத்தங்களின்படி புதிய விலைகளை வெளியிட வேண்டும். டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பாளர்களைப் பின்பற்ற வேண்டும்.
இருப்பினும் புதிய விலைகளை வெளியிடும் தேதியிலிருந்து புதிய மாற்றங்களைச் செயல்படுத்த ஆபரேட்டர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதாவது, 2020 ஜனவரி 30 க்குள் திருத்தப்பட்ட விலைகளை வெளிஇட்டால், அவற்றை மார்ச் 1, 2020 க்குள் செயல்படுத்த வேண்டும்.
இந்த மொத்த சிக்கலுக்கும் எது அடித்தளம்?
டிராய், சந்தாதாரர்களின் மாதாந்திர டிவி பேக் விலையை குறைக்க, ஒளிபரப்பாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் ரூ.12 க்கு மேல் விலை கொண்ட எந்தவொரு தனிப்பட்ட சேனலையும் தொகுக்கப்பட்ட பேக்கில் சேர்க்கக்கூடாது என்று கூறி இருந்தது. இதன் வழியாக ரூ.12 முதல் ரூ.19 என்கிற விலை வரம்பிற்குள் பெரும்பாலான சேனல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சோனி நெட்வொர்க்ஸ், ஸ்டார் இந்தியா, ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சன் டிவி போன்ற ஒளிபரப்பாளர்களிடமிருந்து பிரபலமான பல சேனல்கள் ரூ.19 விலையில் கிடைக்கின்றன.
புதிய திருத்தங்கள் நடைமுறையில் இருப்பதால், ஒளிபரப்பாளர்கள், டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ரூ.19 விலையுள்ள சேனல்களை எந்தவொரு ஆட்-ஆன் பேக்களிலோ ல்லது தொகுக்கப்பட்ட பேக்களிலோ சேர்க்க முடியாது.
டிராய்-இந்த இந்த நடவடிக்கையால் ஒளிபரப்பாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். தற்போது வரையிலாக மார்ச் 1 என்கிற காலக்கெடு மீது எந்த நீட்டிப்பும் அறிவிக்கப்படவில்லை. ஆக ஆட்டம் இனிமேல் தான் சூடு பிடிக்க போகிறது.
நீதிமன்றங்களை அணுகிய டிடிச் ஆபரேட்டர்கள்; ஏன்?
தேசிய கட்டண ஆணை (என்.டி.ஓ) 2.0-வின் ஒரு பகுதியாக, ஜனவரி 15 தேதிக்குள் புதிய சேனல் விலைகளை அறிவிக்குமாறு ஒளிபரப்பாளர்களை ட்ராய் கேட்டுக்கொண்டது.
இருப்பினும், ஒளிபரப்பாளர்கள் அந்தந்த உள்ளூர் நீதிமன்றங்களை என்.டி.ஓ 2.0-விற்கு எதிராக அணுகினர். இது சார்ந்த பல்வேறு வழக்குகளை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, இந்த வழக்குகள் அடுத்ததாக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ரூ.20,000-க்குள் இந்த 5 ஸ்மார்ட்போன்களை விட "பெஸ்ட் போன்" ஒன்னு இருந்தா நீங்களே சொல்லுங்க!
ஆக பிப்ரவரி 12 என்ன நடக்கும்?
ஆக பிரபல டிடிஎச் ஆபரேட்டர்களான டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி மற்றும் சன் டைரக்ட் ஆகியவைகள் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் புதிய திட்டங்களை கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.டி.எச் ஆபரேட்டர்களுடன் இணைந்து கேபிள் டிவியும் அதே நாளில் புதிய திட்டங்களைக் கொண்டு வரலாம்.
டிராய் போட்ட திட்டம் தான் என்ன?
ஒளிபரப்பாளர்கள் தங்களது புதிய விலைகளை 2020 ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அறிவித்திருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து டிடிஎச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதிக்குள் தங்களது புதிய விலைகளை அறிவித்திருக்க வேண்டும். பின்னர் இந்த புதிய விலைகள் மார்ச் 1, 2020 க்குள் செயல்படுத்தப்படவிருந்தன.
அறிமுகமானது Samsung Galaxy A01; சியோமி & ரியல்மி சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு பெரிய கும்பிடு!
தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும்?
தீர்ப்பு டிராய்-க்கு ஆதரவாக வந்தால், ஒளிபரப்பாளர்கள் டிராய் பரிந்துரைத்த திருத்தங்களின்படி புதிய விலைகளை வெளியிட வேண்டும். டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒளிபரப்பாளர்களைப் பின்பற்ற வேண்டும்.
இருப்பினும் புதிய விலைகளை வெளியிடும் தேதியிலிருந்து புதிய மாற்றங்களைச் செயல்படுத்த ஆபரேட்டர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அதாவது, 2020 ஜனவரி 30 க்குள் திருத்தப்பட்ட விலைகளை வெளிஇட்டால், அவற்றை மார்ச் 1, 2020 க்குள் செயல்படுத்த வேண்டும்.
இந்த மொத்த சிக்கலுக்கும் எது அடித்தளம்?
டிராய், சந்தாதாரர்களின் மாதாந்திர டிவி பேக் விலையை குறைக்க, ஒளிபரப்பாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் ரூ.12 க்கு மேல் விலை கொண்ட எந்தவொரு தனிப்பட்ட சேனலையும் தொகுக்கப்பட்ட பேக்கில் சேர்க்கக்கூடாது என்று கூறி இருந்தது. இதன் வழியாக ரூ.12 முதல் ரூ.19 என்கிற விலை வரம்பிற்குள் பெரும்பாலான சேனல்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, சோனி நெட்வொர்க்ஸ், ஸ்டார் இந்தியா, ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் சன் டிவி போன்ற ஒளிபரப்பாளர்களிடமிருந்து பிரபலமான பல சேனல்கள் ரூ.19 விலையில் கிடைக்கின்றன.
புதிய திருத்தங்கள் நடைமுறையில் இருப்பதால், ஒளிபரப்பாளர்கள், டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ரூ.19 விலையுள்ள சேனல்களை எந்தவொரு ஆட்-ஆன் பேக்களிலோ ல்லது தொகுக்கப்பட்ட பேக்களிலோ சேர்க்க முடியாது.
டிராய்-இந்த இந்த நடவடிக்கையால் ஒளிபரப்பாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். தற்போது வரையிலாக மார்ச் 1 என்கிற காலக்கெடு மீது எந்த நீட்டிப்பும் அறிவிக்கப்படவில்லை. ஆக ஆட்டம் இனிமேல் தான் சூடு பிடிக்க போகிறது.