ஆப்நகரம்

BSNL ரூ.247 ப்ரீபெயிட் பிளான்: மறந்துடாதீங்க.. நவ.30 குள்ள ரீசார்ஜ் செய்யனும்!

மற்ற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் ரூ.247 நிறைய டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டியை வழங்குவது எப்படி.. இப்படித்தான்.

Samayam Tamil 27 Nov 2020, 9:07 am
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் ரூ .247 திட்டமானது இப்போது முன்பை விட அதிக நன்மைகளை வழங்கும்படி திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.247 திட்டமானது 30 நாட்களுக்கு பதிலாக 40 நாட்கள் என்கிற செல்லுபடியை வாழனும்.
Samayam Tamil bsnl vs jio


Airtel Broadband : இந்த பிளானை தான் முக்கால்வாசி பேரு ரீசார்ஜ் பண்ணுறாங்களாம்!

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.247 ஆனது உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்புடன் வருகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் 3 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.

பயனர்கள் மேற்குறிப்பிட்டுள்ள டேட்டா வரம்பை மீறியதும், இணைய வேகம் 80 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

ஒரு விளம்பர சலுகையின் பகுதியாக, பிஎஸ்என்எல் ரூ.247 திட்டத்தின் செல்லுபடி 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் காலம் 40 நாட்களாக உள்ளது, ஆனால் 2020 நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு நீங்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதலாக 10 நாட்கள் என்கிற செல்லுபடி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை ஜியோவின் 3 ஜிபி டேட்டா திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது தினமும் அதே அளவிலான 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 1000 இலவச நிமிடங்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா போன்றவைகளை வழங்குகிறது. இந்த ஜியோ திட்டத்தின் விலை ரூ.349 ஆகும்.

எப்படி பார்த்தாலும் பிஎஸ்என்எல்-இன் ரூ.247 திட்டமானது ஜியோவை விட அதிக வேலிடிட்டி மற்றும் அதிக அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது.

சற்றே தொடர்புடைய செய்திகளை பாரதல், பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கில் ஃபிஷிங் நடவடிக்கைகளை மேற்கொண்ட மோசடி செய்பவர்களைத் தடுக்கத் தவறியதால், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 30 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஏர்டெல், வி மற்றும் ஜியோ உள்ளிட்ட பிற ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல்-க்கு அதிக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஏன் செய்யல? - BSNL, ஜியோ, ஏர்டெல், வோடாபோனுக்கு அபராதம் விதித்த TRAI!

ஏறக்குறைய 60 - 70% மோசடி மெசேஜ்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மீதான ஃபிஷிங் முயற்சிகளானது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் கீழ் தான் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்