ஆப்நகரம்

அதிக மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களைக் கண்டறிய உதவும் ரிமோட் சென்சார் - உச்சநீதிமன்றம் அதிரடி!

வாகனங்களின் மாசுபடுத்தும் அளவைக் கண்டறிய உதவும் சென்சாரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Gadgets Now 6 Sep 2018, 3:38 pm
புதுடெல்லி: வாகனங்களின் மாசுபடுத்தும் அளவைக் கண்டறிய உதவும் சென்சாரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil EPCA


தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் அடுத்த மாதம் முதல் RFID எனப்படும் ரேடியோ அலைக்கற்றை அடையாளக் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தை நிறுவ சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு(EPCA) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் டெல்லிக்குள் நுழையும் வாகனங்களை சென்சார் மூலம் மாசுபடுத்தும் அளவைக் கண்டறிந்து விடும். சராசரி அளவை விட, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, உடனடியாக அதன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கிறது.

சிஎஸ்இயின் 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் பேசிய இபிசிஏவின் உறுப்பினரான சுனிதா நரைன், சென்சார் அடிப்படையிலான தொழில்நுட்பம் மாசுபாடு ஏற்படுத்துபவர் மீது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தும். இந்த கருவி டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பொருத்தப்படும்.

ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டால், அதன்பிறகு ஓட்டுநர்களிடையே அச்சம் தொற்றிக் கொள்ளும். இதேபோன்ற தொழில்நுட்பம் சீனாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் வரும் போது, மாசுபாடு ஏற்படுத்தும் குறிப்பிட்ட வாகனத்தை மட்டும் கண்டறிவது கடினம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

This sensor-based system will detect polluting vehicles.

அடுத்த செய்தி

டிரெண்டிங்