ஆப்நகரம்

டிக்டாக் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Apr 2019, 11:34 pm
மத்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அது தொடர்பான மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Samayam Tamil தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் மேல்முறையீடு
தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் மேல்முறையீடு


டிக்டாக் செயலியால் பல சமூக சிரழிவுகள் ஏற்படுவதாக கூறி, அவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் டிக்டாக் நிறுவனம்ச் சார்பில் கோரிக்கை விடப்பது.

டிக்டாக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, தலைமை நீதிபதி ரஞ்சல் கோகாயிடம் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்.

தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். டிக்டாக் மேல்முறையீட்டில் நடைபெறும் விசாரணை தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்