ஆப்நகரம்

பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும் டிக்டாக் செயலி

தமிழகத்தில் டிக்டாக் தடைசெய்யப்படும் என மாநில அரசின் எச்சரிக்கையை அடுத்து, அதை பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என செயலியை நிர்வகித்து வரும் பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 21 Feb 2019, 12:46 am
இந்திய செயல்பாட்டுக்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடைமுறைகளுடன் டிக்டாக் செயலி மேம்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக செயலியின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முடிவு


சீனாவை சேர்ந்த ’பைட் டான்ஸ்’ என்கிற நிறுவனம், டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. இந்திய மக்களிடம் இந்த செயலி, வரம்பு மீறிய ஆபாசத்தை உருவாக்குவதாக அண்மையில் மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.

அதன்படிப்படையில் தமிழகத்தில் டிக்டாக் செயலி தடைசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது அந்த செயலியின் பயன்பாட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், டிக்டாக் செயலியை தடை செய்யும் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பலரும் ஆதரவும் தெரிவித்திருந்தனர். இதற்கான நடவடிக்கைகளையும் அரசு விரைவாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பைட் டான்ஸ் நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும். செயலி பயனாளர்கள் தவறான நோக்கங்களுக்கு வித்திடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ள பைட் டான்ஸ் நிறுவனம், டிக்டாக் செயலியில் கடுமையான நடைமுறைகள் கொண்டுவரப்படும் என உறுதியளித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்