ஆப்நகரம்

ட்விட்டரால் தன் நிறுவனத்தின் "தலைவரையே" காப்பற்ற முடியவில்லை! சம்பவமும் பின்னணியும்!

இதற்கு நாங்கள் காரணம் அல்ல என்று ட்விட்டர் நிறுவனம் அடித்த 'பல்டி' இருக்கிறதே... அடடா! கவுண்டமணி சாரின் சோமர்சால்ட் தோற்றது!

Samayam Tamil 31 Aug 2019, 4:56 pm
இணையத்திற்குள் வந்துவிட்டால் யாருக்குமே பாதுகாப்பு கிடையாது என்பதற்கு ஏகப்பட்ட லீக்ஸ் மற்றும் ஹேக் சம்பவங்களை நாம் எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் இப்படியொரு "தரமான சிறப்பான சம்பவம்" நடக்குமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
Samayam Tamil Twitter CEO Jack Dorsey Twitter Account Was Hacked


"ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்ததை" போல, பொதுவாக சாமானிய மக்களிடம் மட்டுமே ஆட்டம் காட்டும் ஹேக்கர்கள், அவ்வப்போது சில "பெரிய தலைகளையும்" தொட்டு பார்க்க தவறுவதில்லை.

அப்படியாக Chuckle Squad என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் ஒரு ஹேக்கர் குழுவானது, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ஜாக் டோர்சியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை ஹேக் செய்தது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்துள்ளது.

சுந்தர் பிச்சையை திட்டி தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்! ஏன்? எதற்காக?

ஹேக் செய்யப்பட்டதுமே, ஜாக் டோர்சியின் அக்கவுண்டின் வழியாக இனக் குழப்பங்கள், யூத விரோத செய்திகள் மற்றும் ஹோலோகாஸ்ட் மறுப்பு போன்றவைகளை பிரதிபலிக்கும் ட்வீட்கள் பதிவாகின. அப்படியாக பதிவான "அட்டாக்கிங்" ட்வீட்டுகள் ஆனது சுமார் 10 நிமிடங்கள் வரை ஜாக் டோர்சியின் அக்கவுண்டின் இருந்தன.

அதன் பிறகு ஹேக்கர்களால் அக்கவுண்ட்டை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. ஜாக் டோர்சியின் அக்கவுண்ட் மீண்டும் "நல்ல கைகளால்" கையகப்படுத்தப்பட்டதும் அந்த ட்வீட்டுகள் உடனடியாக டெலிட் செய்யப்பட்டன.

இந்த ஹேக்கிங் சம்பவம் நடந்து முடிந்த சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, ட்விட்டர் காம்ஸ் "அக்கவுண்ட் இப்போது பாதுகாப்பாக உள்ளது, ட்விட்டரின் அமைப்புகள் சமரசம் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று ட்வீட் செய்தது.

பின்னர் ட்விட்டர் நிறுவனம் இந்த சம்பவத்திற்கு காரணம், டோர்சியின் செல் ஆப்ரேட்டர் தான் என்று குற்றம் சாட்டியது. "மொபைல் வழங்குநரின் பாதுகாப்பு மேற்பார்வை காரணமாக, அக்கவுண்ட் உடன் தொடர்புடைய தொலைபேசி எண் ஆனது சமரசம் செய்யப்பட்டது" என்று கூறியுள்ளது. இதன் வழியாக ஹேக்கர்கள் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி ட்வீட்களை அனுப்பி உள்ளனர் என்றும் விளக்கமளித்துள்ளது.

சுந்தர் பிச்சையை பதவியை விட்டு தூக்குகிறதா Google? LinkedIn Post-ஆல் பரபரப்பு!

ட்விட்டர் நிறுவனம் தனது எஸ்எம்எஸ் சேவைக்கு உதவுவதற்காக கிளவுட்ஹாப்பர் என்கிற நிறுவனத்தை அணுகியிருந்தது. அதாவது உங்கள் ட்விட்டர் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து 404-04 என்கிற எண்ணிற்கு நீங்கள் அனுப்பும் டெக்ஸ்ட் ஆனது ட்விட்டரில் பதிவாகும்.

இந்த ஓட்டையின் வழியாகத்தான் ஹேக்கர்கள் "அட்டாக்கிங்" ட்வீட்டுகளை தட்டிவிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக டோர்சியின் அக்கவுண்ட் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டில் ஹேக் செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்