டெல்லி: உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டுக்கான காகித பயன்பாட்டுக்கு முடிவுகட்ட பிரத்யேக குறியீட்டு எண்ணை அறிமுகம் செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
பயோ மெட்ரிக் முறையில் டிஜிட்டல் விமான டிக்கெட் சோதனை மூலம் விமானங்களில் பயணக்கும் டிஜி யாத்ரா (Digi Yatra) திட்டத்திதை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு டிக்கெட்டுக்கான காகித பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.
புதிய முறையின்படி, விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளிக்கும் பிரத்யேகமான குறியீட்டு எண் ஒன்றைப் பெற வேண்டும். இந்த குறியீட்டு எண்ணை உள்நாட்டு விமான டிக்கெட் பதிவு செய்யும்போது பெற முடியும். ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாளச் சான்றையும் அளிக்க வேண்டியிருக்கும். இந்த டிஜி யாத்ரா குறியீட்டு எண் (DY ID) எண் பயணியின் பயோமெட்ரிக் விவரங்களுன் இணைக்கப்படும்.
டிஜி யாத்ரா திட்டத்துடன் பழைய விமான டிக்கெட் முறையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த முறையைப் பின்பற்றி விமானப் பயணத்தில் காகித பயன்பாட்டைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் பழைய முறையிலேயே டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்துதுறை புகார் மற்றும் உதவிக்காக அறிமுகம் செய்த ஏர் சேவா இணையதளம் விரைவில் டிஜி யாத்ரா குறித்த சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் பயன்படும்.
பயோ மெட்ரிக் முறையில் டிஜிட்டல் விமான டிக்கெட் சோதனை மூலம் விமானங்களில் பயணக்கும் டிஜி யாத்ரா (Digi Yatra) திட்டத்திதை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தொழில்நுட்பக் குழு உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு டிக்கெட்டுக்கான காகித பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும்.
புதிய முறையின்படி, விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளிக்கும் பிரத்யேகமான குறியீட்டு எண் ஒன்றைப் பெற வேண்டும். இந்த குறியீட்டு எண்ணை உள்நாட்டு விமான டிக்கெட் பதிவு செய்யும்போது பெற முடியும். ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் ஒரு அடையாளச் சான்றையும் அளிக்க வேண்டியிருக்கும். இந்த டிஜி யாத்ரா குறியீட்டு எண் (DY ID) எண் பயணியின் பயோமெட்ரிக் விவரங்களுன் இணைக்கப்படும்.
டிஜி யாத்ரா திட்டத்துடன் பழைய விமான டிக்கெட் முறையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த முறையைப் பின்பற்றி விமானப் பயணத்தில் காகித பயன்பாட்டைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் பழைய முறையிலேயே டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
கடந்த 2016ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்துதுறை புகார் மற்றும் உதவிக்காக அறிமுகம் செய்த ஏர் சேவா இணையதளம் விரைவில் டிஜி யாத்ரா குறித்த சந்தேகங்களைப் போக்கிக்கொள்ளவும் பயன்படும்.