ஆப்நகரம்

தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் உ.பி., இளைஞர்களின் கண்டுபிடிப்பு

தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நவீன வாஷ் பேசினை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.

Samayam Tamil 26 Jun 2018, 3:44 pm
தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நவீன வாஷ் பேசினை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வடிவமைத்துள்ளனர்.
Samayam Tamil hqdefault (1)


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் இரண்டு மாணவர்கள் ஸ்மார்ட் வாஷ் பேசின் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

வழக்கமான வாஷ் பேசின் போலவே இருக்கும் இதில் குழாய் திறந்து தண்ணீர் கசிந்தால், உடனே மொபைல் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலர்ட் செய்யும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கலன், கழிவுநீரை சுத்திகரித்து மறு பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றித்தரும்.
தங்களது இந்த கண்டுபிடிப்புக்கு ‘தண்ணீர் காவலர்கள்’ (Water Cops) என்று பெயர் வைத்துள்ளனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய போட்டியிலும் இந்த ஸ்மார்ட் வாஷ் பேசினுக்கு பரிசு கிடைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்