ஆப்நகரம்

வியாழனில் பூமியைவிட 5 மடங்கு தண்ணீர்!

வியாழன் கிரகத்தில் அதிக அளவு தண்ணீர் இருப்பதாக அமெரிக்க, ரஷ்ய, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்திருக்கிறது.

Samayam Tamil 15 Sep 2018, 4:09 pm
வியாழன் கிரகத்தில் அதிக அளவு தண்ணீர் இருப்பதாக அமெரிக்க, ரஷ்ய, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்திருக்கிறது.
Samayam Tamil PIA21985_hires


சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன். இதில் பூமியை விடப் பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக புதிய கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.

பூமியின் துணைக்கோளான நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்த நிலையில் வியாழன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

கடந்த 1995ஆம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலத்தின் மூலம் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாகவும் வியாழனில் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் என்பதாலும் பூமியைவிட வளிமண்டல அடர்த்தி பல மடங்கு அதிகம் என்பதாலும் அங்கு உறுதியாக தண்ணீர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கலிலியோ அனுப்பும் தகவல்களைக் கொண்டு நாசா விஞ்ஞானிகளுடன், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அடங்கிய குழு இது குறித்த ஆய்வில் உள்ளனர்.

“வியாழனில் காணப்படும் ஆசிய கண்டத்தைவிட பெரிதாகக் கருதப்படும் செந்நிறப் புள்ளி தண்ணீரால் நிரம்பியது. அப்பகுதியைச் சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுகிறது. பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது.” என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்