ஆப்நகரம்

ஒரே குழப்பம்; புதிய ப்ரைவஸி கொள்கையை "ஒத்திவைத்த" வாட்ஸ்அப்!

அப்டேட் குறித்த வெகுஜன குழப்பம் மற்றும் பரவும் தவறான தகவல்களுக்கு மத்தியில் வாட்ஸ்அப் அதன் புதிய தனியுரிமைக் கொள்கையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 16 Jan 2021, 8:47 am
வாட்ஸ்அப் அதன் சர்ச்சைக்குரிய புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள பயனர்களுக்கு இன்னுமதிக நேரம் கொடுக்கும் என்று கூறுகிறது, அதாவது பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமைக் கொள்கை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil WhatsApp Tips and Tricks 2019


இந்த ஒத்திவைப்பு சார்ந்த அறிக்கையின் போது, குறிப்பிட்ட அப்டேட பற்றிய வெகுஜன “குழப்பம்” மற்றும் “தவறான தகவல்” ஆகியவற்றை வாட்ஸ்அப் மேற்கோளிட்டுள்ளது.

சிக்னல் ஆப்பின் ஓனர் யார்? சிக்னலுக்குள் இருக்கும் வாட்ஸஅப்பின் "பழைய ஆள்" யார்?

இந்த பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், "மே 15 அன்று புதிய வணிக விருப்பங்கள் கிடைப்பதற்கு முன்பு, பயனர்கள் கொள்கையை அவரவர்களின் வேகத்திற்கு ஏற்ப மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும்” என்றும், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி இது யாருடைய சேவையையும் துண்டிக்காது என்றும் கூறியுள்ளது.

அதாவது கட்டாயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்த புதிய வாட்ஸ்அப் ப்ரைவஸி கொள்கைகளுக்கான "காலக்கெடுவானது" பிப்ரவரி 8-இல் இருந்து மே 15-க்கு மாற்றப்பட்டுள்ளது.

"எங்கள் சமீபத்திய அப்டேட்டில் எவ்வளவு குழப்பம் உள்ளது என்பதை நாங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன, எங்கள் கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம்." என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் உறுதியுடன் இருப்பதாகவும், "இந்த புதுப்பிப்பு பேஸ்புக்கோடு தரவைப் பகிரும் திறனை விரிவாக்குவதில்லை" என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

டெலிகிராம் பற்றி அதிகம் கேட்கப்படும் 7 கேள்விகளும், அதற்கான பதில்களும்!

நினைவூட்டும் வண்ணம், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது ஆப்பை முழுவதுமாகப் பயன்படுத்துவதற்கான திறனை இழக்க நேரிடும் என்கிற பாப்-அப் எச்சரிக்கையுடன் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அதன் தனியுரிமை மாற்றங்களை திடீரென அறிமுகப்படுத்திய பின்னர் கிளம்பிய எதிர்ப்புகளே புதிய கொள்கையை சற்றே தாமதப்படுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த அறிவிப்பிற்கு பின்னர் வாட்ஸ்அப் அதன் முந்தைய "வார்னிங்" நோட்டிபிக்கேஷன்களுக்கு பதிலாக "விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளும்படி மக்களிடம் கேட்கப்படும் தேதியை நாங்கள் இப்போது நகர்த்தி வருகிறோம்" என்று நிறுவனம் கூறுகிறது.

"பிப்ரவரி 8 ஆம் தேதி யாரும் உங்கள் அக்கவுண்ட்டை இடைநிறுத்தவோ அல்லது நீக்கவோ மாட்டார்கள். மே 15 அன்று புதிய வணிக விருப்பங்கள் கிடைப்பதற்கு முன்பு நாங்கள் படிப்படியாக மக்களிடம் சென்று எங்கள் கொள்கையை அவரவர் வேகத்தில் மதிப்பாய்வு செய்ய உதவுவோம்." என்றும் கூறியுள்ளது.

ஆகமொத்தம் புதிய ப்ரைவஸி கொள்கைகள் மொத்தமாக கழட்டிவிடப்படவில்லை, கொஞ்சம் காலம் கழித்து அப்படியே மீண்டும் நம்மிடம் வரவுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்