ஆப்நகரம்

வாட்ஸ்அப்பை உருவாக்கியவர் புலம்பல்!

வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாக வாட்ஸ்அப்பை உருவாக்கிய பிரையன் ஆக்டன் புலம்பி வருகிறார்.

Samayam Tamil 19 Mar 2019, 5:34 pm
வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனத்துக்கு மிகக்குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாக வாட்ஸ்அப்பை உருவாக்கிய பிரையன் ஆக்டன் புலம்பி வருகிறார்.
Samayam Tamil brian acton


வாட்ஸ்அப்பை முதன் முதலாக 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பிரையன் ஆக்டன் மற்றும் ஜன் குவாம் ஆகியோர் தான் இதனை உருவாக்கினர். அப்போதைய நேரத்தில் உலகில் பெரும்பாலானோர் பேஸ்புக் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இதனால், உலகில் முதல் இடத்தில் பேஸ்புக் இருந்தது. , வாட்ஸ்அப் வந்த பிறகு, இளைய பட்டாளங்கள் பேஸ்புக்கை விடுத்து வாட்ஸ்அப்பில் கவனம் செலுத்த தொடங்கினர். தொடர்ந்து, பேஸ்புக்கிற்குப் போட்டியாக வாட்ஸ்அப் வரத் தொடங்கியது. வாட்ஸ்அப்பின் அபரிமிதமான வளரச்சியைக் கண்டு பயந்த பேஸ்புக் நிறுவனம் அதனை விலைக்கு வாங்க வாட்ஸ்அப் உருவாக்கியவர்களிடம் பேரம் பேச தொடங்கியது.

இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர் கொடுத்து வாட்ஸ்அப்பை மொத்தமாக விலைக்கு வாங்கியது. இதன்பிறகு, இணைய உலகில், வாட்ஸ்அப் பேஸ்புக் இரண்டும் களை கட்டத்தொடங்கி இன்று வரையில் முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே பேஸ்புக்கை டெலிட் செய்து விடுங்கள் என்று வாட்ஸ்அப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல கட்டங்களில் பிரையன் ஆக்டன் பேஸ்புக்கை வஞ்சித்து வந்தார். மேலும், மிகக்குறைந்த விலைக்கு வாட்ஸ்அப்பை விற்று விட்டதாக கூறும் அவர், இது தனக்கு இன்று வரை வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்