ஆப்நகரம்

மழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு!

மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்போன் உபயோகித்ததால், வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மகராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 23 Jun 2019, 4:51 pm
மகராஷ்டிராவில் மழை பெய்யும் போது, அபிஜீத் என்ற வாலிபர் செல்போன் பயன்படுத்தியதால், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil mobile phone rain


மகராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜீத் ஸ்ரீ கிருஷ்ணா (22). இவர் நேற்று வெளியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மழை பெய்தது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கா, அபிஜீத் மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார். அப்போது செல்போனில் தனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அபிஜீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்தியதால் தான், அபிஜீத் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது. ஏற்கனவே, அவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்ததால், செல்போன் கதிர்வீச்சு, மின்னல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்