ஆப்நகரம்

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்: இன்று மாலை தீர்ப்பு

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதியைத் தவிர 232 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டன.

TNN 20 May 2016, 1:51 pm
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதியைத் தவிர 232 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டன.
Samayam Tamil thanjavur aravakurichi election verdict will be today evening
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்: இன்று மாலை தீர்ப்பு


தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தொகுதிகளில் வாக்களர்களுக்கு கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைத்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அரவக்குறிச்சி பாமக வேட்பாளர் மற்றும் தஞ்சை பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று மாலை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

புதிய வேட்புமனுக்களை பெற்று வேறு தேதியில் தேர்தல் நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அடுத்த செய்தி