கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடியே அதிரடியாக அறிவித்தார். இதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன. ஆனால், இது மக்களை பாதிக்கவில்லை என்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தற்போது நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பார்த்ததையும் விட, மோடி அலை அந்த மாநிலத்தையே சுருட்டி உள்ளது என்றுதான் கூற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது.
பிரதமர் மோடியே முன்னின்று அறிவித்த பண மதிப்பிழப்பு பெரிய அளவில் இந்த மாநிலங்களில் யாரையும் பாதிக்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் தனது வெற்றி என்ன என்பதை முன்னிறுத்தி மோடி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதைத்தான் முன் வைத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் அகிலேஷ் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கூறினாலும், இறுதியில் கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சி மோதல், குடும்ப அரசியல், அகிலேஷுக்கும் அவரது சித்தாப்பாவுக்கும் இடையிலான மோதல் சமாஜ்வாடிக் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவைக் கொடுத்துள்ளது. இது பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துவிட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் அதிக இடங்களில் தற்போது பாஜக 50 டங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கும் பண மதிப்பிழப்பு பெரிய அளவில் மக்களை பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளே தேர்தலை முடிவு செய்துள்ளது.
The election results shows thar Demonitisation not affected people
தற்போது நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பார்த்ததையும் விட, மோடி அலை அந்த மாநிலத்தையே சுருட்டி உள்ளது என்றுதான் கூற வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது.
பிரதமர் மோடியே முன்னின்று அறிவித்த பண மதிப்பிழப்பு பெரிய அளவில் இந்த மாநிலங்களில் யாரையும் பாதிக்கவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் தனது வெற்றி என்ன என்பதை முன்னிறுத்தி மோடி பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு என்ன செய்வோம் என்பதைத்தான் முன் வைத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் அகிலேஷ் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார் என்று கூறினாலும், இறுதியில் கட்சிக்குள் ஏற்பட்ட உள்கட்சி மோதல், குடும்ப அரசியல், அகிலேஷுக்கும் அவரது சித்தாப்பாவுக்கும் இடையிலான மோதல் சமாஜ்வாடிக் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவைக் கொடுத்துள்ளது. இது பாஜகவின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்துவிட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் அதிக இடங்களில் தற்போது பாஜக 50 டங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வெறும் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கும் பண மதிப்பிழப்பு பெரிய அளவில் மக்களை பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் நிலவும் பிரச்சனைகளே தேர்தலை முடிவு செய்துள்ளது.
The election results shows thar Demonitisation not affected people