ஆப்நகரம்

ரூ.149க்கு எல்லாமே அன்லிமிடட்: பிஎஸ்என்எல்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ஈடுகொடுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவிக்கவுள்ளது.

Gadgets Now 6 Dec 2016, 8:44 pm
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ஈடுகொடுக்க பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவிக்கவுள்ளது.
Samayam Tamil this is how bsnl plans to take on reliance jios free services
ரூ.149க்கு எல்லாமே அன்லிமிடட்: பிஎஸ்என்எல்


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஜியோ சிம் கார்ட் மூலம் அனைத்து சேவைகளையும் கட்டணமின்றியும் அளவின்றியும் பயன்படுத்திக்கொள்ளும் சலுகையை அளிக்கிறது. ஜியோ சிம் கார்டின் இந்த அறிமுகச் சலுகை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிரடிச் சலுகை மூலம் மூன்றே மாதங்களில் 50 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பொதுத்துறை நிறுனவமான பிஎஸ்என்எல் புதிய சலுகை ஒன்றை அறிவிக்கவுள்ளது. அதன் படி ரூ.149 மாதக்கட்டணத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எண்களுக்கும் முற்றிலும் இலவசமாகவும் பேச முடியும். மேலும், 300MB டேட்டாவும் இலவசமாகக் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை பற்றிய தகவல் அந்நிறுவன அதிகாரி ஒருவர் மூலம் கிடைத்துள்ளது. பிஎஸ்என்எல் இதனை புத்தாண்டுச் சலுகையாக விரைவில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி