ஆப்நகரம்

வேட்புமனு தாக்கல் செய்ய நாளையுடன் கடைசி

தமிழகத்தில் வருகிற மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

TNN 28 Apr 2016, 9:20 am
சென்னை: தமிழகத்தில் வருகிற மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
Samayam Tamil tomorrow is the last date to file nomination
வேட்புமனு தாக்கல் செய்ய நாளையுடன் கடைசி


கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் இதுவரை 2,112 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை பகல் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்வது நிறைவு பெறுகிறது. இன்று வியாழக்கிழமை (ஏப்.28) அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மனுதாக்கல் செய்யவுள்ளனர்.

இதனால் வேட்பு மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வருகிற ஏப்-30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான மே-2ஆம் தேதியே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி