ஆப்நகரம்

இந்தியாவின் ஜூன் மாதம் தவறவிடக்கூடாத முக்கிய சுற்றுலா இடங்கள்!

இயற்கை அழகும், இதமான காலநிலையும் கொண்ட இடங்கள் பல இந்தியாவில் இருக்கின்றன.அ அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

Samayam Tamil 30 May 2018, 5:42 pm
கோடை சுற்றுலாவுக்கு திட்டமிடும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உடனடியாக உங்கள் நினைவுக்கு வருபவை காஷ்மீர், சிம்லா, டார்ஜிலிங் போன்ற பனிமூடிய மலைப்பிரதேசங்கள் தான். ஆனால், இவற்றை போலவே இயற்கை அழகும், இதமான காலநிலையும் கொண்ட இடங்கள் பல இந்தியாவில் இருக்கின்றன.அ அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
Samayam Tamil sir
இந்தியாவின் ஜூன் மாதம் தவறவிடக்கூடாத முக்கிய சுற்றுலா இடங்கள்!


சிரபுஞ்சி

இந்தியாவின் கிழக்கே உலகிலேயே மிக ஈரப்பதமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்திருக்கிறது. ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி தென் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் உள்ளது. எப்போதும் நிறைந்திருக்கும் பசுமை இங்குவரும் யாவரையும் நிச்சயம் வசீகரிக்கும்.

சிரபுஞ்சி


ஸ்பிடி சமவெளி

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்தப்பகுதி திபெத்திய பௌத்த மடாலயங்களுக்குப் புகழ்பெற்றது. ஸ்பிடி சமவெளி மலையுச்சியிலிருக்கும் ஒரு பெரிய தரிசு நிலம். ஸ்பிடி என்றால் இடைநிலம் என்று பொருள். இதை லடாக் போலவே இந்தியாவுக்குள் இருக்கும் இன்னொரு திபெத் என்று சொல்லமுடியும். இன்றும் காலம் அசையாது கிடக்கும் இடங்கள், மலைப்பகுதிகளின் பௌத்த மடாலயங்கள்தான் இந்த இடத்தின் சிறப்பாக திகழ்கிறது.

ஸ்பிடி சமவெளி


அகும்பே

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்தான் அகும்பே. பெங்களூருவில் இருந்து 360 கி.மீ. சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 350 கி.மீ. சுற்றிலும் மழைக்காடுகள், விதவிதமான மூலிகை மரங்கள், பழைய காலத்து வீடுகள் என்று தன் இயல்பு மாறாமல் காட்சியளிக்கிறது அகும்பே.இந்தியாவில் சிரபுஞ்சிக்குப் பிறகு அதிகமாய் மழைப் பொழியும் இடமான அகும்பேவில் அதைத் தாண்டி ஸ்பெஷல் - 'கிங் கோப்ரா' எனும் ராஜநாகங்கள். அகும்பேவிலுள்ள குஞ்சிகள் அருவி இந்தியாவிலேயே உயரமான அருவிகளில் ஒன்று.

அகும்பே


ரிஷிகேஷ்

டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது.

ரிஷிகேஷ்


புனிதப்பயணம் செல்ல விரும்புபவர்களை மட்டுமல்லாது சாகசப் பிரியர்களையும் ஈர்க்கும் வண்ணம் பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது ரிஷிகேஷ். மலைகளுக்கு நடுவே இருப்பதால் மலையேற்றத்துக்கு ஏதுவான இடமாக திகழ்கிறது.

கசோல்


பரபரப்பில்லாத சாலைகள், அமைதியான உணவகங்கள், நட்பாக பழகும் மக்கள், எப்போதும் இதமான காலநிலை என, முழுமையான இளைப்பாறலுக்கு பொருத்தமான இடம் இது. பார்வதி பள்ளத்தாக்கின் அழகு உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பார்க்க வேண்டிய இடங்கள்: மலானா கிராமம், கீர்கங்கா சிகரம், பார்வதி ஆறு, தீர்த்தன் பள்ளத்தாக்கு, புல்கா கிராமம். குளு மற்றும் மணாலி நகரங்கள் அருகில் தான் உள்ளன.

அடுத்த செய்தி