ஆப்நகரம்

குறைவான பட்ஜெட்டில் வெளிநாடு டூர் செல்ல சிறந்த இடம் பூட்டான் !

இமய மலைகளில் முடிந்துகொள்ளப்பட்டுள்ள பூட்டான் பல்வேறு ஆண்டுகளாகவே நாட்டுப்புற கதைகளாலும் அதிசயங்களாலும் சூழப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jun 2018, 7:17 pm
இமய மலைகளில் முடிந்துகொள்ளப்பட்டுள்ள பூட்டான் பல்வேறு ஆண்டுகளாகவே நாட்டுப்புற கதைகளாலும் அதிசயங்களாலும் சூழப்பட்டுள்ளது.
Samayam Tamil bhutan visit for the first time tourists
குறைவான பட்ஜெட்டில் வெளிநாடு டூர் செல்ல சிறந்த இடம் பூட்டான் !


இந்த நாட்டில்தான் வெற்றியானது தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு மகிழ்ச்சியின் மூலம் அளவிடப்படுகிறது. இங்கு பௌத்த முறையிலான வாழ்க்கை நவீனத்தை சந்திக்கிறது. கண்கவரும் இமயமலைக் காட்சிகள், அமைதியான பௌத்த மடாலயங்கள் மற்றும் நகைச்சுவை விரும்பும் மக்கள் என்று பூட்டான் பல்வேறு ஸ்தலங்களின் இருப்பிடமாக உள்ளது.

உங்கள் மனதில் நிம்மதியான விடுமுறை தேவை என்ற நினைக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் பூட்டானிற்கு செல்லவேண்டும். அதற்கான முக்கிய கரணங்கள் .

ட்டானில் சுற்றிப் பார்க்க ஏராளம் உள்ளது- புலிகளின் கூடு மடாலயம் (டைகர்'ஸ் நெஸ்ட் மானஸ்ட்ரி) என்று பிரபலமாக அறியப்படும் தாக்சுங் பால்பக் மடாலாயம் (தாக்சுங் பால்பக் மானஸ்ட்ரி) அவசியம் காணப்பட வேண்டிய இடம்.

பாரோ பள்ளத்தாக்கிலிருந்து 900 மீட்டர் உயரம் கொண்ட செங்குத்து பாறையின் மீது இது அமைந்துள்ளது. இந்த மடாலயத்திற்கு செல்லும் பயணமானது சுற்றியுள்ள காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் காட்சிகளை அளிக்கும். அசைந்தாடும் வழிபாட்டு கொடிகள் இதற்கிடையே ஊடுருவி இருக்கும்.

இயற்கை மற்றும் வனவாழ்க்கை காதலர்களுக்கு இந்த இடம் உற்சாகம் தரும். இங்குள்ள 70 சதவீத நிலபரப்பு இயற்கை பாதுகாப்பு அரணாக உள்ளது.

இங்கு தேசிய பூங்காக்களை கண்டறிவது கடினம் அல்ல. பூட்டானின் தேசிய விலங்கான டாகின், பனி சிறுத்தைகள், கறுப்பு கழுத்து கொண்ட கொக்குகள், புலகிள் ஆகிய அனைத்தையும் காணலாம்.

சாகசங்கள் தேவை என்று விரும்புவர்கள், நீண்ட மலை ஏறுதல், பாறை ஏறுதல், கயாக்கிங், மீன்பிடித்தல் ஆகிவற்றில் ஈடுபடலாம். பூட்டானிய உணவு அதிசயமான சுவையை வழங்கும். அங்கு மிளகாய்கள் வெறும் தாளிப்புக்கு மட்டும் பயன்படுவதில்லை. உங்கள் சுவை நரம்புகளுக்கு ஏற்ற விருந்து கிடைக்கும். மிளகாய்தான் அங்கு முக்கிய உணவு.

ஆண்டு முழுவதும் பூட்டானிற்கு செல்லலாம் என்றாலும், அங்கு ஏப்ரல் முதல் ஜூலை அல்லது செப்டம்பர் முதல் நவம்பர் வரை செல்லலாம் . இந்த காலங்களில் இங்கு நடைபெறும் சேசுஸ் (Tsechus) பண்டிகையையை கண்டுகலிக்க இந்த மாதம் நிறைய சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.

மலை ஏறுபவர்கள் அல்லது எளிமையாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், மார்ச் மற்றும் மே மாதத்திற்கு இடையில் அங்கு பயணிக்க வேண்டும். அப்போது மலைத்தொடர்கள் முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.

எனவே தவறமல் பூட்டான் சென்றுஒரு தடவை பார்த்துவிட்டு வாருங்கள்

அடுத்த செய்தி