கேரள மாநிலம், இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது இடுக்கி அணை. 839 அடி உயரமுள்ள குறவன் மலை, 925 அடி உயரம் கொண்ட குறத்தி மலை ஆகிய இரு மலைகளை இணைத்து “ஆர்ச்” வடிவில் 1973ம் ஆண்டு கட்டப்பட்ட இடுக்கி அணை, ஆசியாவின் முதல் ”ஆர்ச்” அணை என்ற பெருமை கொண்டது. 650 அடி பரப்பளவில் 550 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அணை, இந்தியாவின் மூன்றாவது பெரிய அணையாகவும் விளங்குகிறது.
இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேறும் மதகுகளை கொண்ட அணையாக செறுதோணி அணை விளங்குகிறது. அந்தவகையில் 1976ல் அணை பயன்பாட்டிற்கு வந்தபிறகு 1981, 1992 ஆகிய ஆண்டுகளில் நீர்மட்டம் அதிகமானதால் இடுக்கி அணையில் ஷட்டர் இல்லாமல் செருதோணி அணையில் ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது,
இந்நிலையில் கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இடுக்கி அணை நிரம்பியுள்ளது. 2,400 அடி கொண்ட இடுக்கி அணை தற்போது முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து உபரிநீரைத் திறக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையிலிருந்து, நாளை உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் செறுதோணி அணையின் தாழ்வாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை முன்னிட்டு செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செறுதோணி அருகே பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டது இடுக்கி அணை. 839 அடி உயரமுள்ள குறவன் மலை, 925 அடி உயரம் கொண்ட குறத்தி மலை ஆகிய இரு மலைகளை இணைத்து “ஆர்ச்” வடிவில் 1973ம் ஆண்டு கட்டப்பட்ட இடுக்கி அணை, ஆசியாவின் முதல் ”ஆர்ச்” அணை என்ற பெருமை கொண்டது. 650 அடி பரப்பளவில் 550 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த அணை, இந்தியாவின் மூன்றாவது பெரிய அணையாகவும் விளங்குகிறது.
இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேறும் மதகுகளை கொண்ட அணையாக செறுதோணி அணை விளங்குகிறது. அந்தவகையில் 1976ல் அணை பயன்பாட்டிற்கு வந்தபிறகு 1981, 1992 ஆகிய ஆண்டுகளில் நீர்மட்டம் அதிகமானதால் இடுக்கி அணையில் ஷட்டர் இல்லாமல் செருதோணி அணையில் ஷட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது,
இந்நிலையில் கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இடுக்கி அணை நிரம்பியுள்ளது. 2,400 அடி கொண்ட இடுக்கி அணை தற்போது முழுக்கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அணையிலிருந்து உபரிநீரைத் திறக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணையிலிருந்து, நாளை உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் செறுதோணி அணையின் தாழ்வாரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அணையில் தண்ணீர் திறக்கப்படுவதை முன்னிட்டு செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.