ஆப்நகரம்

Cherrapunji : நோகலிகை நீர் வீழ்ச்சியின் அழகை கண்டு என்ஜாய் பண்ணலாம் வாங்க!

சிரபுஞ்சி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள நோகலிகை எனும் பெயரிலான நீர்வீழ்ச்சியே, நம் நாட்டின் மிக உயரமான அழகிய நீர்வீழ்ச்சியாகும். இதன் அழகையும் பிரம்மிப்பையும் நேரில் காண்போருக்கு ஆனந்தத்தையும், ஆச்சர்யத்தையும் ஒரு சேர தரவல்லதாக இருக்கும். வாருங்கள் இந்த உயரமான நீர்வீழ்ச்சியை காண சிரபுஞ்சி நகருக்கு பயணிக்கலாம்.

Samayam Tamil 23 Nov 2019, 3:58 pm
சிரபுஞ்சி நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள நோகலிகை எனும் பெயரிலான நீர்வீழ்ச்சியே, நம் நாட்டின் மிக உயரமான அழகிய நீர்வீழ்ச்சியாகும். இதன் அழகையும் பிரம்மிப்பையும் நேரில் காண்போருக்கு ஆனந்தத்தையும், ஆச்சர்யத்தையும் ஒரு சேர தரவல்லதாக இருக்கும். வாருங்கள் இந்த உயரமான நீர்வீழ்ச்சியை காண சிரபுஞ்சி நகருக்கு பயணிக்கலாம்.
Samayam Tamil cherrapunji waterfalls at meghalaya wondrous how to reach things to do
Cherrapunji : நோகலிகை நீர் வீழ்ச்சியின் அழகை கண்டு என்ஜாய் பண்ணலாம் வாங்க!


​அபரிமிதமான மழைப் பொழிவு


இந்தியாவில் அதிக அளவு மழை பெய்யும் இடமென்றால் அதில் சிரபுஞ்சிதான் டாப். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அதிகப்படியான மழைப் பொழிவுக்கு புகழ் பெற்ற இந்த சிரபுஞ்சி நீர்வீழ்ச்சி, மிக முக்கியமாக இங்கு பெய்யும் மழைகளிலிருந்தே தன் நீர் வரத்தைப் பெறுகிறது. மழைகள் பொழிந்து நீர் வீழ்ச்சிக்கான நீரை சேமித்து வரும் சிறு ஓடைகள் இந்த இடத்தில் குழுமி மொத்தமாக வீழ்கின்றன. இப்படியாக இந்த நீர் வீழ்ச்சி பிரம்மாண்ட உருவாகிறது.


​எப்போது செல்லக் கூடாது


என்னதான் இந்த நீர்வீழ்ச்சி பிரம்மிப்பாக இருந்தாலும் கூட, மழை பெய்யாத காலங்களில் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலங்களில் இங்கு சுற்றுலா செல்பவர்கள் ஏமாந்து திரும்புகிறார்கள். அதனால்தான் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட வறண்ட காலத்தின் போது, இந்த நீர் வீழ்ச்சி தன் பிரம்மாண்டத்தை இழக்கிறது. நீர் வரத்து குறைந்து சில சமயங்களில் மிக குறைந்த நீரே விழுகிறது.


​வண்ணமயமான குளம்


பொதுவாகவே நீர் வீழ்ச்சி வீழும் இடத்தில் பெரிய அல்லது சிறிய அளவிலான நீர் தேக்கங்கள் உருவாகும். அவை சில சமயங்களில் ஆறாக உருவெடுத்து ஓடும். இங்கும் அது போலவே மிகச் சரியாக நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில், நீலம் மற்றும் பச்சை நிற நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது என்றால் மிகையில்லை.


​புராணக் கதை கூறும் வரலாறு


நோகலிகை நீர் வீழ்ச்சிக்கு ஒரு அழகிய புராண கதை உண்டு. அது ஒரு பெண்ணின் தற்கொலை பற்றியது. இதன் அருகிலுள்ள மலையில் மேலிருந்து கீழே குதித்து தன் உயிரை மாய்த்து கொண்ட ஒரு பெண்ணை பற்றியதாக இருக்கிறது இந்த கதை. சிலர் ஆதி மக்களுக்காக போராடிய பெண்தான் இந்த நோகலிகை என்று கூறுகிறார்கள்.


​அருகிலிருந்தே காண முடியும்


சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, சற்று தொலைவில் உள்ள நோக்குமுனையிலிருந்து மட்டுமே இந்த நீர் வீழ்ச்சியை பார்க்க முடியும். சமீபத்தில் படிகள் கட்டப்பட்ட அதன் அடிப்புறத்திற்கு அருகில் வரை நம்மை அழைத்துச் செல்கிறார்கள். இதனால் இந்த நீர்வீழ்ச்சியை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு தற்போது கிடைக்கிறது.


​யாரெல்லாம் செல்லக் கூடாது


இந்த அருவிக்கு சிலர் அனுமதிக்க படமாட்டார்கள். அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், இங்கு கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற நோய்களினால் அவதிப்படுவோர் இறங்கி வர வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில், பல நூறு படிகளில் இறங்கி வருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும். இதனால் அவர்களின் பாதிப்பு மேலும் அதிகமாகும்.


​சாப்பிட என்னென்ன


இப்பகுதியை சுற்றிலும் காணப்படும் ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் உணவுச் சாலைகளில் உள்ளூர் காஸி உணவு வகைகளிலிருந்து வட மற்றும் தென் இந்திய உணவு வகைள் வரையிலான பல்வேறு உணவு பதார்த்தங்களும் கிடைக்கின்றன. சீன நூடுல்ஸ் கூட கிடைக்கிறது.


​ஷாப்பிங்


இப்பகுதியின் உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்கக்கூடிய வகையில் ஏராளமான சிறு கடைகளும் இங்கு காணப்படுகின்றன. எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு திரும்ப மொத்தம் இரண்டு நாட்களாவது தேவைப்படும். சூப்பராக திட்டமிட்டு சென்று வாருங்கள். மேலும் பல சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களுக்கு நம்ம சமயம் தமிழ் சுற்றுலா கட்டுரைகளை தொடர்ந்து படியுங்கள்.


அடுத்த செய்தி