ஆப்நகரம்

மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகம் காண்போம் வாருங்கள்!

குழந்தைகள் மதுரை சுற்றுலா செல்பவர்கள் என பலரும் பார்வையிடுகின்றனர். 1959ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இந்த அருங்காட்சியகம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. காந்தி கொல்லப்பட்ட போது அவரின் மேல் இருந்த ரத்தக்கறை படிந்த துண்டு இன்றும் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்று இந்த இடம்.

Samayam Tamil 5 Dec 2019, 3:45 pm
குழந்தைகள் மதுரை சுற்றுலா செல்பவர்கள் என பலரும் பார்வையிடுகின்றனர். 1959ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி இந்த அருங்காட்சியகம் முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. காந்தி கொல்லப்பட்ட போது அவரின் மேல் இருந்த ரத்தக்கறை படிந்த துண்டு இன்றும் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்று இந்த இடம்.
Samayam Tamil gandhi museum in madurai entry fee visit timingsthings to do and how to reach
மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகம் காண்போம் வாருங்கள்!


​எங்குள்ளது


மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து மதுரை மேலூர் செல்லும் வழியில் மிக அருகிலேயே அமைந்துள்ளது காந்தி அருங்காட்சியகம்.


​கட்டிடக் கலை


நாயக்கர் காலத்தில் ராணி மங்கம்மாள் என்பவரிடமிருந்த தமுக்கம் மாளிகைதான் இந்த கட்டிடம். இந்த மாளிகையின் முன் பகுதி காந்தியின் சேவகரம் போன்றே அமைந்துள்ளது.


​என்னவெல்லாம் பார்க்கலாம்


காந்தி பயன்படுத்திய பொருள்கள், அவரின் நினைவு சின்னங்கள் என பல அரிய பொருள்களை இந்த அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர். இங்கு செல்பவர்களுக்கு மிக குறைந்த அளவு கட்டணமும் அனுமதியும் வழங்கப்படுகிறது. காந்தி கொல்லப்பட்ட போது அவரின் மேல் இருந்த ரத்தக்கறை படிந்த துண்டு இன்றும் இந்த அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.


​நுழைவுக் கட்டணம்


தனி நபருக்கு நுழைவு கட்டணமாக எதுவும் இல்லை. அதே நேரம் கேமரா கொண்டு செல்ல 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


​நேரம்


வெள்ளிக் கிழமை தவிர்த்த மற்ற நாட்களில் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும் 2 மணியிலிருந்து 5.45 மணி வரைக்கும் திறந்திருக்கும்.


​எப்படி அடைவது


செப்டம்பர் முதல் ஜனவரி வரை இங்கு வருவதற்கு தகுந்த தலமாகும்.

மதுரை நகரத்தின் இதய பகுதியில் அமைந்துள்ளதால், விமானம், பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து நாம் எளிதில் காந்தி அருங்காட்சியகத்தை அடைய முடியும்.

ராமேஸ்வரம், சென்னை, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட இடைகளிலிருந்து இங்கு பேருந்து சேவைகள் உள்ளன. ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.


அடுத்த செய்தி