ஆப்நகரம்

coimbatore gass forest : கெளலி பிரெளன் சாலையில் ஒரு ஹாட் மியூசியம் போலாமா!

கோயம்புத்தூர் மாவட்டம், கெளலி பிரெளன் சாலையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது காஸ் மியூசியம்

Samayam Tamil 11 Jan 2020, 12:58 pm
கோயம்புத்தூர் மாவட்டம், கெளலி பிரெளன் சாலையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது காஸ் மியூசியம்.
Samayam Tamil 800px-Leopard_at_Gass_Forest_Museum,_Coimbatore,_Tamil_Nadu,_India
PC:Booradleyp1


காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம், 1902-ல் தொடங்கப்பட்டது. இந்திய வனங்களின் மொத்த உருவமாக திகழும் இந்த மியூசியத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு வரலாறைச் சுமந்து நிற்கிறது.

நுாற்றாண்டு கண்ட இந்த அருங்காட்சியகம், ஹோரேஸ் ஆர்சிபேல்ட் காஸ் என்ற பிரிட்டன் வன அலுவலரால் நிர்மாணிக்கப்பட்டு, 1902ல், திறக்கப்பட்டது. அதன் பின், 1905ல் இப்போதைய அருங்காட்சியகத்தை கவர்னர் லார்டு பென்ட்லேண்ட் என்பவர் திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத்தின் நடுவே, பிரமாண்டமாக வீற்றிருக்கிறது இந்தியன் பைசன். இது மைசூரை ஆண்ட ஜெயச்சந்திர உடையாரால் 1956-ல் வழங்கப்பட்டது. இங்கே இடம்பெற்றிருக்கும் புலியின் நான்கு வார கருவும், "யானை டாக்டர்", வி.கிருஷ்ணமூர்த்தியால் அளிக்கப்பட்ட யானையின் கருவும், பார்வையாளர்களை சுண்டியிழுக்கும்.

இதுதவிர ஒரு பெரிய யானையின் எலும்புக் கூடு, பாடம் செய்யப்பட்ட சிறுத்தை, லங்கூர், கேஷ்ல் மான் போன்றவற்றின் பாகங்களும் இருக்கின்றன. இவையனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய வனங்களில் சுற்றித்திரிந்தவை.

இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கும் 456 வருட பழைமையான தேக்குமரம் வியப்பின் உச்சம். அம்மரத்தின் குறுக்கு வெட்டு துண்டின் சுற்றளவு 5.7 மீட்டர். வாஸ்கோடகாமா இந்தியாவில் தரையிறங்கியபோது இந்த மரத்தின் வயது 50. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட போது இதன் வயது 260. இப்படி பல நூற்றாண்டுகளைக் கடந்து, இங்கே நிற்கிறது இந்த டெக்டோனா கிராண்டீஸ் என்னும் தேக்கு மரம்.

இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கியகாஸ் அருங்காட்சியகத்தில் மிக உயரமான சந்தன மரம், மிகப்பெரிய விதை, கிங் கோப்ரா முட்டைகள், விமான கட்டுமானத்தில் பயன்படும் எடை குறைவான பால்சா மரத்துண்டு, இந்தியப் பூச்சி இனங்கள் எனப் பலவியப்பூட்டும் காட்சிப் பொருள்களும் இருக்கின்றன.

காஸ் அருங்காட்சியகம், இரண்டாம் உலகப்போரின்போது, கீரீஸ் மற்றும் மால்டாவில் இருந்து வந்த போர் அகதிகள் தங்கும் இடமாகமாற்றப்பட்டது. அகதிகளாக வந்தவர்கள் குளிர் காய்வதற்காக எரித்துவிட்டார்கள். பல பொருள்கள் ஏலத்தில் விற்கப்பட்டது. ஜே.ஏ.மாஸ்டர்என்னும் பிரிட்டிஷ் வன அதிகாரியின் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டவைதான் தற்போது இங்கே எஞ்சியிருக்கிறது.

காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம் பல ஆண்டுகளை கடந்தும் இந்திய வனத்தின் மதிப்பையும், சிறப்பையும் பெருமை சாற்றிக் கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி