ஆப்நகரம்

Kannur Airport : கண்ணூர் நகரில் சுற்ற வேண்டிய சூப்பரான சுற்றுலாத் தளங்கள்!

ஆசியாவிலேயே ஒரே டிரைவ் இன் பீச் கண்ணூரில் தான் இருக்கிறது. அதுதான் முழுப்பிளாங்கட் பீச். அலைகளுக்கு மிக அருகில் வாகனங்களை ஓட்டிச் செல்லமுடியும்.

Samayam Tamil 30 Oct 2019, 4:13 pm
மலபாரின் வணிக மையமாக விளங்கி, டச்சுக் காரர்களின் தொடர்ச்சியான உள் நுழைதல், மைசூர் சுல்தான்களின் ஆட்சி என பல ராஜ்ஜியங்களின் கால்தடம் கண்ணூரில் ஆழப் பதிந்துள்ளது. அந்த அம்சங்களோடு கூடிய பல இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி நாகரிகம் வளர்ந்த நிலையும், பழமையும் இணைந்து ஒரு வித்தியாசமான பகுதிகளைக் கொண்டதுதான் கண்ணூர். இங்கு நெசவுத் தறிகள் மிக பிரபலம். கண்ணூரில் சுந்தரேஸ்வர் கோயில், ஊர்பழசிகாவு கோயில், அருள்மிகு மாவிலைக்காவு கோயில், அருள்மிகு சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கொட்டியூர் சிவன் கோயில், அருள்மிகு ராகவபுரம் கோயில், மற்றும் கிழக்கேகரா அருள்மிகு கிருஷ்ணா கோயில் போன்ற புகழ் பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. வாருங்கள் கண்ணூரின் சுற்றுலா அம்சங்களைக் காண்போம்.
Samayam Tamil Meenkunnu_Beach kannur photos 0


கண்ணூரில் கட்டாயம் காண வேண்டிய சுற்றுலாத் தளங்கள்



இயற்கை - எழிமலா, பைதல் மலா உள்ளிட்ட இன்னும் பல இடங்கள் காண்பதற்கு ஏற்றவாறு இருக்கின்றன.
கடற்கரைகள் - முழப்பிலங்காடு கடற்கரை, பையாம்பலம் கடற்கரை, மீன்குண்ணு கடற்கரை, மாப்பிள்ளா கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகள் சூழ் கண்ணூரில் இரண்டு நாட்களாவது சுற்றி திரிய வேண்டும்.
வேடிக்கைகள் - கண்ணூர் கண்டோன்மென்ட், ஆரக்கல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்கள் நல்ல பொழுது போக்கு பகுதிகளாக இருக்கும்.
காட்டுயிர்கள் - ஆரளம் காட்டுயிர் சரணாலயம், கண்ணவம் காடுகள், பூங்கோட்டு காவு காடுகள்.
வரலாற்று பகுதிகள் - செயின்ட் ஆஞ்சலோ கோட்டை இங்கு காண வேண்டிய முக்கிய வரலாற்று பகுதியாகும். இன்னும் பல இடங்கள் இருக்கின்றன.

முழுப் பிளாங்கட் பீச்
பய்யம்பலம் பீச்
செய்ண்ட் ஆஞ்செலோ ஃபோர்ட்
பள்ளிக் குண்ணு
பரசினிக் கடவு பாம்பு பூங்கா
பப்பினிசேரி
மாவிலைக் காவு கோவில்
அரளம் காட்டுயிர் சரணாலயம்
கொட்டியூர் சிவன் கோவில்
பழசி அணை
எழிமலா
பைதல் மலா
குண்டர்ட் மாளிகை
மடயிப் பாறா
தலிப்பறம்பா
பேரளச் சேரி
மீன்குண்ணு பீச்
மாப்பிள்ளா பே
கீழுண்ண எழரா பீச்

முழப்பிலங்காடு கடற்கரை,செயிண்ட். ஆஞ்சலோ கோட்டை,பையம்பலம் கடற்கரை,ஆரக்கல் அருங்காட்சியகம்,கண்ணூர் கண்டோன்மென்ட்,கண்ணூர் கலங்கரை விளக்கம்,மீன்குண்ணு கடற்கரை,மாப்பிள்ளா கடற்கரை உள்ளிட்ட இடங்கள் கண்ணூரில் காணவேண்டிய இடங்களாகும்.

எப்போது செல்வது?

ஜூலை

ஆகஸ்ட்

செப்டம்பர்

அக்டோபர்

நவம்பர்

டிசம்பர்

ஜனவரி

பிப்ரவரி

மார்ச்

சுற்றுலா பற்றிய சுவாரசியமான தகவல்கள்


  • ஆசியாவிலேயே ஒரே டிரைவ் இன் பீச் கண்ணூரில் தான் இருக்கிறது. அதுதான் முழுப்பிளாங்கட் பீச். அலைகளுக்கு மிக அருகில் வாகனங்களை ஓட்டிச் செல்லமுடியும்.
  • பய்யம்பலம் பீச் ரம்மியமான வெண்ணிற மணற் பரப்பைக் கொண்டுள்ள கடற்கரை ஆகும்.
  • பய்யம்பலம் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சியை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூடுகின்றனர்.
  • தாயும் சேயும் சேர்ந்த மாதிரியான அமைப்பு கொண்ட ஒரு சூப்பர் சிலை இங்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது இந்த பகுதியின் கவர்ச்சி அம்சமாகும்.
  • கண்ணூர் கோட்டை மிக அழகானது. இங்கு சுற்றியுள்ள இயற்கையும் ரசனைமிக்கது.
  • அரிய வகை ஊர்திகள் பல காட்சிப் படுத்தப்பட்டுள்ள பரசினிக் கடவு பாம்பு பூங்கா பார்வையாளர்கள் பலரை ஈர்க்கும் தன்மை கொண்டது.
  • அரளம் காட்டுயிர் சரணாலயம் எனும் பகுதி தலசேரி அருகே அமைந்துள்ளது இது மிகவும் சிறந்த சுற்றுலா அம்சமாகும்.
  • அழகான அணை ஒன்று இங்கு உள்ளது அதன் பெயர் பழசி அணை. இது ஏராளமான பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
  • 290 மீ உயரத்தில் அமைந்திருக்கும் மலைகளின் தொகுப்புதான் எழி மலா எனும் பகுதி. எங்கே திரும்பினாலும் அப்படி ஒரு பச்சை பசேலென்ற காட்சியை பார்வையாளர்களுக்கு பரிசளிக்கும் ஒரு அற்புதமான இடம்.
  • அமைதியான இயற்கை அழகுடன் கூடிய ஒரு கடற்கரை இங்குள்ளது.
  • கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் பிரம்மிப்பாக அமைந்துள்ள இந்த மலைத் தொடர் இயற்கையின் அழகில் சுற்றுலா பயணிகளை வியக்கச் செய்யும்.

கோவில்கள்

அக்கரை கொட்டியூர் கோயில், இக்கரை கொட்டியூர் கோவில் என இரண்டாக இருந்தாலும் கொட்டியூர் சிவன் கோவில் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இடம் புகழ் பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.

மே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாக திருவிழா இந்த கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மொத்தம் 28 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும்.

பேரளச் சேரி சுப்பிரமணியன் கோவில் கண்ணூரின் மிக முக்கிய சுற்றுலா அம்சமாகும். பிரம்மிக்க வைக்கும் இங்குள்ள கோவில் கிணறுகளின் தோற்றம், ராஜஸ்தானின் படிக்கிணறுகளைப் போல் அமைந்துள்ளது.

மாவிலைக் காவு கோவில் பழமையான ஒன்று. இங்கு நிகழ்த்தப்படும் அடி உற்சவம் எனும் சண்டை நிகழ்ச்சி இந்தியாவின் வேறு எந்த கோவிலிலும் இல்லாதது.

அடுத்த செய்தி