ஆப்நகரம்

Nagayakshi Temple : நாகயாஷியம்மன்னை காண .... புலிக்காலுக்கு பயணிக்கலாம் வாங்க...

திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல், தவிப்பவர்களுக்கு அருள் புரியும் புலிக்கால் நாகயாஷியம்மன் கோவில் குறித்து அறியலாம்

Samayam Tamil 20 Jan 2020, 3:46 pm
திருமணமாகி குழந்தையில்லாமல் இருப்பது, சமூகத்தில் பெருங்குறையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் குடும்பத்தில் சண்டை, மன உளைச்சல் கணவன் - மனைவி பிரிவு என ஏராளமான பிரச்சனைகள் உண்டாகின்றன. இந்த குறைபாட்டிற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இருந்தாலும், தோஷங்கள் தான் காரணம் என்று நம்புவோரும் உண்டு. இவர்கள் கோவில் கோவிலாக குழந்தை வரம் வேண்டி, காணிக்கைகள், பரிகாரங்களோடு செல்கின்றனர். அத்தகையவர்கள் வரம் தரும் அற்புத கோவிலை இங்கே காணலாம்.
Samayam Tamil need-baby-visit-this-temple-atleast-once


கேரள மாநிலம் பாலக்காடு அருகே மலப்புரம், கோழிக்கோடு செல்லும் சாலையில் புலிக்காடு நாகயாஷியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து எளிதில் செல்லலாம். காலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெறும். அபிஷேகத்திற்கு பிறகு காலை 11.30 மணியளவில் கோயில் நடை மூடப்படும். பின் மாலையில் 5.30க்கு திறக்கப்படும் நடைவாசல், இரண்டு மணி நேரம் திறந்திருக்கும்.

வனப்பகுதியில் அமைந்திருக்கும் கோவிலில் அம்மன் சுயம்பாக தோன்றி அருளுகிறார். புலிக்கல் தரவாடுவில் ஒரு தம்பதி இருந்தனர். அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் நாக கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்தனர். இவர்களின் பக்தியை மெச்சி, நாகம் குழந்தை அருள் தந்தது. அந்த குழந்தைக்கு அம்மினியம்மன் என்று பெயரிட்டனர். இதற்கு ஒரு குழந்தை பிறந்தது.

அதற்கு தங்கமணியம்மை என்று பெயர் வைத்தனர். இக்குழந்தை தங்க நாகத்தை கொன்றதால், நாகராஜனுக்கு கோபம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பரம்பரையில் பிறந்த குழந்தைகள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர். ஆனால் நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களை, வரம் தந்து புலிக்கால் நாகயாஷியம்மன் அருளுகிறார். அம்மனை மனமாற பிரார்தித்து வந்தால், நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

தன் தங்கைக்கு 6 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை என்றும், இக் கோயிலை பற்றி கேள்விபட்டு இங்கு வந்ததாக பக்தர் ஒருவர் கூறுகிறார். இப்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். குழந்தை வரம் வேண்டி பிரார்த்திப்பவர்கள், இந்த கோவிலுக்கு நிச்சயம் ஒருமுறை வந்து பார்க்கலாமே!

அடுத்த செய்தி