தாஜ்மஹாலின் ஜெராக்ஸ் காப்பி
தாஜ்மஹாலை அச்சுப் பிரதி எடுத்தமாதிரி அச்சு அசலா அப்படியே தாஜ்மஹால் மாதிரியே நிறைய படைப்புகள் இருக்கு . அவுரங்காபாத்தில் உள்ள பீபி கா மக்பாரா கட்டிடமும் வங்கதேசத்தில் உள்ள இன்னொரு தாஜ்மஹால் ஆகியவை பார்ப்பதற்கு தாஜ்மஹாலைப் போலவே இருக்கின்றன. இவை கட்டாயம் பார்க்க வேண்டியவை
மும்தாஜ் அல்ல பானுபேகம்
வரலாற்றில் கிடைத்த ஆய்வுப்படி மும்தாஜ் ஷாஜகானின் முதல் மனைவி அல்ல அவருடைய இயற்பெயர் மும்தாஜும் அல்ல அர்ஜுன் பானு பேகம் என்பதுதான் அவரது உண்மையான பெயர் அதிலும் மற்ற எல்லா மனைவிகளை விடவும் மும்தாஜ் மீது தான் ஷாஜகான் அதிக பாசம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு இந்த தாஜ்மஹாலே சாட்சி.
மும்தாஜ் மரணம் ஷாஜகான் சோகம்
ஷாஜகானின் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உடல்நிலை சரி இல்லாமல் இறந்துபோனார் அர்ஜுமண்ட் பானு பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட மும்தாஜ். இதனால் ஷாஜகான் மும்தாஜ்காக ஒரு அழகிய பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப ஆசைப் பட்டார்.
ஆயிரம் யானைகளை வைத்து தாஜ்மகால் கட்டப்பட்டது இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் நிறைய இடங்களில் இருந்து இந்த பளிங்கு கற்களை கொண்டு வந்து யமுனை ஆற்றங்கரையில் அதற்குதான் இந்த யானைகளை பயன்படுத்தினார்கள்
தாஜ்மஹாலின் சிறப்புகள்
பளிங்கு கற்களை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டாலும் அலங்கார வடிவமைப்பு விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காலை நண்பகல் இரவு நிலவொளி வீசும் இரவு என எந்த காலநிலையிலும் தாஜ்மஹால்.
தாஜ்மஹாலின் உள்ளுக்குள் சென்று பார்த்தால் இஸ்லாம் மக்களின் புனித நூலான குரானின் குர்ஆனின் வசனங்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருப்பதை கவனிக்க முடியும்
தாஜ்மஹாலுக்கு உன் தாஜ்மகால் என்றும் ஒரு பெயர் உள்ளது இங்கிருக்கிற கண் முன்பை விட கல்லறையில் அல்லாஹ்வுடைய 99 பேரும் இத்தனை கல்வெட்டால் பொறிக்கப்பட்டிருக்கிறது அப்படின்னு செல்லப்பட்டது
தாஜ்மகாலே கட்டுவதற்கான கட்டிடப் பொருட்கள் எல்லாம் பஞ்சாப், ராஜஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா, திபெத், அரேபியா அப்படின்னு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது
ஷாஜகான் கருப்புப் பளிங்குக் கற்களை வைத்து இன்னொரு தாஜ்மஹால் அது இப்ப இருக்கிற தாஜ்மஹால் வெளிவர இருக்கும் அந்த கருப்பு கலர் வச்சு ஒரு தாஜ்மகால் உருவாக்க விரும்புகிறதா கூறப்பட்டது ஆனா அவரோட மகன் கூட போராடி அதனால அந்த முயற்சியை கைவிட்டு விட்டதாகவும் அதையே செய்தி சொல்கிறது
கருப்பு நிறத்தில் பிரம்மாண்ட தாஜ்மஹால்
கருப்பு கலர்ல பளிங்கு கற்களை கொண்டு தாஜ்மஹாலைப் போல் ஒரு பிரம்மாண்டமான ஷாஜகான் விரும்பினார். யமுனை நதி ஓட மறுபக்கத்தை இந்த கருப்பு தாஜ்மஹால் கட்ட சொல்லி ஷாஜகான் முடிவெடுத்திருந்தார். காதல் மனைவி மும்தாஜுக்கு வெள்ளை நிற மாளிகையும், தனக்கு கருப்பு நிறத்தில் பிரம்மாண்ட மாளிகையும் கட்ட அவர் எண்ணியிருக்கவேண்டும்.
ஆனால் அவருடைய மகன் அவுரங்கசீப் கூட ஏற்பட்ட மோதலில் கருத்து வேறுபாடு காரணமாக கருப்பு தாஜ்மஹால் கனவு கனவாகவே நின்றுவிட்டது. தந்தை ஷாஜகானை வீட்டுக் காவலில் வைத்த மகன் அவுரங்கசீப் கருப்பு தாஜ்மஹால் கட்டும் கனவை சுக்கு நூறாக்கினார்
இப்படி வீட்டு காவலில் வைக்கப்பட்ட ஷாஜகான் நோய்வாய்ப்பட்டு இறந்துட்டாரு தன்னோட அறையின் சுவற்றில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்த்தால்தாஜ்மகாலைப் பார்த்து ரசித்ததாக நிறைய பேர் சொல்றாங்க. ஆனாலும் இது ஒரு கற்பனை கதை தான்னு வரலாற்று ஆசிரியர்களும் சொல்றாங்க. இதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.
உண்மைதான் என்ன? ஏன் இப்படி புரளிகள் சுற்றுகின்றன?
இது மாதிரி சான்றுகள் இல்லாத கதைகளை ஏன் உலாவிக் கொண்டிருக்கிறது? வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து தாஜ்மஹால பார்க்கறதுக்கு அதிகம் விரும்புறாங்க. இந்த சுற்றுலாவை மிகவும் ரசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தாஜ்மஹாலை பற்றி அதிக அளவு தகவல்கள் தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு சுவாரசியம் கூட்டுவதற்காக பலர் இதுபோன்ற கதைகளை உருவாக்குகின்றனர். இதனால் பல கட்டுக் கதைகள் புனையப்படுகின்றன. இதில் ஆங்கில மொழியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதுபோல தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட கதை ஒன்று உள்ளது.
ஷாஜகான் இந்த தாஜ்மகாலை கட்டிய அனைத்து தொழிலாளர்களின் கைகளையும் வெட்டி விட்டதாகவும், இதனால் ஒரு தொழிலாளி தாஜ்மஹாலின் கூரையில் துளையிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த துளையின் வழியாக இன்றளவும் தண்ணீர் சொட்டுகிறது போன்ற கதைகள் செவி வழியாக நிறைய பேரிடம் சென்று செல்கிறது. ஆனால் இந்த கதையில் உண்மை இல்லை என்பதை அறிவியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
இதுபோன்று சுற்றுலா வழிகாட்டிகள் புதிய புதிய கதைகளை உருவாக்கி விடுவதன் காரணமாக உண்மையான வரலாறு பலருக்கு தெரிவதில்லை அல்லது புனையப்பட்ட கதைகளுடன் பின்னிப்பிணைந்து பல வரலாறு கதைகளாக அறியப்படுகிறது சுற்றுலா மட்டுமே முக்கியமில்லை உண்மையான வரலாற்றையும் அந்த பகுதி பற்றிய உண்மையான விஷயங்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அதற்காகவே இந்த கட்டுரை. இது போன்ற சில தகவல்களையும் மேலும் தெரிந்து கொள்ள மறக்காமல் சமயம் தமிழ் சுற்றுலா கட்டுரைகளை தொடர்ந்து படியுங்கள்