ஆப்நகரம்

விமானத்தில் புகைப்பிடிப்பதற்கு தடை என்றாலும் ஆஷ்ட்ரே இருப்பது ஏன் தெரியுமா..?

பல பொது இடங்களில் புகைப்படத்திற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகள், வணிகவளாகங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் புகைப்பிடிப்பதற்கு என்று பிரத்யேகமான இடம் உள்ளது.

Samayam Tamil 21 Jun 2019, 8:13 pm
விமானங்களின் பயணத்தின் போது புகைப்பிடிப்பதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் அதை முதன்முதலில் தடை செய்த நாடு அமெரிக்கா. 2000ம் ஆண்டு விமானங்களில் புகைப்பிடிப்பதற்கான தடையை அந்நாடு அமல்படுத்தியது.
Samayam Tamil விமானங்களில் ஆஷ்ட்ரே இருப்பதற்கு இதுதான் காரணம்
விமானங்களில் ஆஷ்ட்ரே இருப்பதற்கு இதுதான் காரணம்


இன்று அனைத்து நாடுகளிலும் அந்த தடை உத்தரவு அமலில் உள்ளது. எனினும், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் புகைப்பிடிக்கும் போது சாம்பலை தட்டுவதற்கான ஆஷ்ட்ரோ விமான கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும்.

இதை இந்தியாவின் விமானங்களிலும் பார்க்க முடியும். விமானங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை உத்தரவு அமலில் இருக்கும் போது, எதற்காக கழிவறைகளில் ஆஷ்ட்ரே இருக்க வேண்டும் என்று பலரும் சிந்தித்திருக்கலாம். முரணாகவும் தோன்றிருக்கலாம்.

இதுகுறித்து ஆராய்ந்த போது, அமெரிக்காவின் சட்டப்படி விமானங்களில் ஆஷ்ட்ரேக்கள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமானங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை இருந்தாலும், ஆஷ்ட்ரே இருத்தல் வேண்டும்.

அதுவும் அந்த ஆஷ்ட்ரேக்களை கழட்டி மாட்டும் அம்சங்கள் பெற்றிருக்க வேண்டும் என்கிறது அமெரிக்கச் சட்டம். புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், விமானங்கள் ஏறும் போது பயணிகள் சிலர் சீகரெட்டை கையில் எடுத்து வருவார்கள். அதை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து போட இந்த ஆஷ்ட்ரேக்கள் உதவும்.

எனினும், விமானங்களில் செல்லும் போது பயணிகள் புகைப்பிடித்து மாட்டிக்கொள்வதும், அபராதங்கள் விதிக்கப்படுவதும், ஏன் சிலர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்படுவதும் கூட உண்டு. அண்மையில் கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் போன பயணி ஒருவர் சட்டவிரோதமாக புகைப்பிடித்து மாட்டிக்கொண்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற காரணங்களுக்காகவும் ஆஷ்ட்ரேக்கள் விமானங்களின் கழிவறையில் வைக்கப்படுகிறது.

அடுத்த செய்தி