ஆப்நகரம்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 3:48 pm
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Tamil-image (17)
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது, கும்பக்கரை அருவி. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவிக்கு விடுமுறை நாள்கள், வார இறுதி நாள்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

அடுத்த செய்தி