ஆப்நகரம்

நித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது?

நித்யானந்த சுவாமிகள் என்பவரது ஆசிரமத்தில் பல சர்ச்சைகள் இருந்தாலும், அவரை நம்பி பலர் அந்த ஆசிரமத்திற்கு படையெடுக்கின்றனர். அவரின் யோகா மற்றும் அமைதிக்கான பயிற்சி வகுப்புகள் அவரின் பக்தர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக கூறுகிறார்கள். பெங்களூருக்கு மிக அருகில் பிடாடியில் இவரது ஆசிரமம் அமைந்துள்ளது. நித்யானந்தா ஆசிரமம் செல்லும் பல பக்தர்கள் தங்களுக்கு அமைதி கிடைப்பதாக கூறுகிறார்கள். சரி அப்படி நித்யானந்த ஆசிரமத்தில் என்னதான் நிகழ்கிறது என்பதையும், நீங்கள் நித்யானந்த ஆசிரமம் செல்ல ஆசைப் பட்டால் எப்படி செல்வது என்பது குறித்தும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்

Samayam Tamil 25 Nov 2019, 5:47 pm
நித்யானந்த சுவாமிகள் என்பவரது ஆசிரமத்தில் பல சர்ச்சைகள் இருந்தாலும், அவரை நம்பி பலர் அந்த ஆசிரமத்திற்கு படையெடுக்கின்றனர். அவரின் யோகா மற்றும் அமைதிக்கான பயிற்சி வகுப்புகள் அவரின் பக்தர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிப்பதாக கூறுகிறார்கள். பெங்களூருக்கு மிக அருகில் பிடாடியில் இவரது ஆசிரமம் அமைந்துள்ளது. நித்யானந்தா ஆசிரமம் செல்லும் பல பக்தர்கள் தங்களுக்கு அமைதி கிடைப்பதாக கூறுகிறார்கள். சரி அப்படி நித்யானந்த ஆசிரமத்தில் என்னதான் நிகழ்கிறது என்பதையும், நீங்கள் நித்யானந்த ஆசிரமம் செல்ல ஆசைப் பட்டால் எப்படி செல்வது என்பது குறித்தும் இந்த பதிவில் காண்போம் வாருங்கள்
Samayam Tamil a spritual tour to swamy nithyananda dhyanapeetam places in india
நித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது?


​எங்குள்ளது


நித்யானந்தா ஆசிரமம் தமிழகம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் இயங்கி வருகிறது. ஆனால் நித்யானந்தா பெங்களூரில்தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


​என்னவெல்லாம் இருக்கிறது


நித்யானந்தா ஆசிரமம் நாம் நினைப்பது போல வெறும் ஆசிரமம் மட்டும் இல்லை. இங்கு பல விசயங்கள் இருக்கின்றன. முக்கியமாக நித்யானந்தா புனித கலை பல்கலைக்கழகம் உள்ளது. நித்யானந்தா சரோவர், நித்யானந்தா நகரா, நித்யானந்தா மானசரோவர் என ஒரு பெரிய பகுதியே இதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விசயங்கள் வெளியில் தெரியாமல் இருக்கின்றன.


​முக்கிய நிகழ்வுகள்


நித்யானந்த ஆசிரமத்தில் முக்கிய நிகழ்வுகளாக யோகா, தியானம் மற்றும் வேதிக கலாச்சாரம் பற்றிய வகுப்புகள் நடைபெறுகின்றன. இவற்றுக்காகவே பல பக்தர்கள் நித்யானந்தா ஆசிரமம் செல்கிறார்கள்.


​சிவராத்திரியில் ருத்ரதாண்டவமாடும் நித்யானந்தா


நித்யானந்தா சிவராத்திரி நாட்களில் ஒரு பெரிய நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வார். எப்படி ஆதியோகி பீடத்தில் நடைபெறுமோ அதுபோலவே இங்கும் பல சிறப்பு விசயங்கள் நடந்தேறும். சிவனைப் போல அலங்கரிக்கப்பட்ட நித்யானந்தா மக்கள் முன் உரையாற்றுவார். இப்படி பல மக்கள் நம்பும் நித்யானந்தா மீது பல சர்ச்சைகளும் வந்துள்ளது. அவை அவ்வப்போது வெளியாகி அமைதியாகிவிடும். ஆனால் நாளுக்கு நாள் அவரை நம்பும் மக்களும் பக்தர்களும் அதிகமாகிக்கொண்டே வருவதாகவே தெரிகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் அவர் தனது ஆசிரமத்தை தொடங்கியுள்ளார். சரி பெங்களூரு ஆசிரமத்துக்கு எப்படி செல்வது தெரியுமா?


​எப்படி செல்வது?


பெங்களூருவிலிருந்து மைசூரு செல்லும் வழியில் ராமநகரா எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நித்யானந்தா ஆசிரமம். சரியாக 36 கிமீ தொலைவில் இருக்கும் இந்த இடத்தை 1 மணி நேரத்தில் அடையலாம் என்றாலும் போக்கு வரத்து நெரிசல்களை பொறுத்து 2 மணி நேரம் வரை ஆகலாம்.

பெங்களூரு மாநகர மையத்தை கடந்து கும்பல்கோடு வழியாக ஷேஷாகிரிஹள்ளி தாண்டியதும் பிடாடியை அடையலாம்.

அடுத்த செய்தி