ஆப்நகரம்

Perambur, Perungudi,Washermanpet - கடலுக்குள்ள போகப்போகுதாம் உண்மையான சென்னை! அதிர்ச்சி தகவல்

சென்னையின் பெருங்குடி, பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் கடலில் மூழ்கவிருக்கிறதாம்!

Samayam Tamil 1 Nov 2019, 3:52 pm
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பெரு வெள்ளத்தை அவ்வளவு சீக்கிரம் நம்மில் யாரும் மறந்துவிடப் போவதில்லை. நினைத்தாலும் முடியாத ஒரு செயல்தான் இந்த வெள்ளமும் அதனால் கிடைத்த பலனும். சென்னையில் கன மழை என்ற செய்தியைக் கேட்கும் போதெல்லாம் இதுமாதிரியான எண்ணங்கள் மனதில் ஓடும். மீண்டும் இப்படியான ஒரு மழை பெய்து சென்னை மாநகரத்தை திக்கு முக்காட விடுமோ என்ற பயம் எல்லார் மனதிலும் வந்து செல்கிறது. அதுமாதிரியான ஒரு பிரச்சனைதான் இப்போதும்.
Samayam Tamil perambur


தமிழகத்தின் தலைநகராக மட்டுமல்லாது, தமிழக சுற்றுலாவின் தலைநகரமுமாகிய சென்னையின் முக்கிய இடங்கள் கடலுக்கடியில் செல்லவிருக்கிறது. இந்த அதிர்ச்சி அறிக்கை அமெரிக்க ஆய்வு ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இதே ஆய்வில் மும்பை மாநகரம் அப்படியே கடலில் மூழ்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய இடங்களான பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, பெருங்குடி உள்ளிட்ட இடங்கள் கடலுக்கடியில் மூழ்கிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மிக பெரிய கவலையை தருகிறது. ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1000 வருடங்களோ 2000 வருடங்களோ இல்லை... வெறும் 30 வருடங்கள்தான். நாம் மரணமடைவதற்குள் சென்னையின் பல இடங்கள் கடலில் மூழ்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது சென்னையில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் பதற்றத்தையும் கூடவே ஏற்படுத்தியுள்ளது.

வரும் 2050ஆம் ஆண்டில் சென்னைக்கு புறநகரில் இருக்கும் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் மற்றும் பெருங்குடி ஆகியவை கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் நன்றாக பார்த்தோமேயானால் இந்த இடங்கள் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட சமமான நிலப்பரப்பில் அல்லது குறைவான உயரத்திலேயே உள்ளன. இப்படி இருப்பதால் கடல் நீர் கூடிய விரைவில் ஊருக்குள் புகும் வழியைத் தேர்ந்தெடுக்கும். புயல் மழை வெள்ளங்களால் பாதிக்கப்பட்டு கடல் நீர் புகுந்து இந்த பகுதிகள் கடலுக்குள் மூழ்க போகிறதாம்.

இந்த பகுதிகளில் நிறைய சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பெரம்பூரில் அரசு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை அதில் முக்கியமானது ஆகும். இதுமட்டுமின்றி சென்னையின் கடற்கரை சுற்றுலாத் தளங்களுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உலக தரமான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது.

தலைவர்களின் சமாதிகள் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளன. வருங்காலத்தில் சென்னை எப்படி இருக்கப்போகிறது என்பதை நினைப்பதற்கே மனம் பதைபதைக்கிறது. எனினும் புவி வெப்பமடைதலை தவிர்க்கும் வகையிலான இயற்கைக்கு இதமான செயல்களை செய்து பேணி பாதுகாப்போம்.

அடுத்த செய்தி