புனே கார்ப்பரேசன் ஆடிட்டோரியம்
Photo Division, Ministry of Information & Broadcasting, Government of India
1934ம் ஆண்டு ஜூன் 25ம் நாள், தனது மனைவி கஸ்தூரிபா காந்தி அவர்களுடன் சேர்ந்து காந்தியடிகளும் புனே கார்ப்பரேசன் ஆடிட்டோரியத்துக்கு வர வேண்டியது. அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கார் மூலமாக வந்துகொண்டிருந்தார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே மாதிரியான இரு கார்களில் ஒன்றில் காந்தி, தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். இன்னொரு காரும் உடன் சென்றது. இவரை கொல்ல சதி செய்தவர்கள் தவறுதலாக இன்னொரு காரை பாம் வைத்து தகர்த்துள்ளனர். இதனால் மகாத்மாவும் அவரது மனைவியும் உயிர் தப்பினர். இந்த தகவலை காந்தியின் உதவியாளர் தனது தி லாஸ்ட் பேஸ் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
பஞ்ச்காணி
பத்து வருடங்களுக்கு பிறகு, 1944ம் ஆண்டு இரண்டாவது முறையாக காந்திஜி கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டார். ஆகா கான் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி விடுதலை ஆன பின்னர் உடல் நல குறைவு காரணமாக பஞ்ச்காணியில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டார். இது புனே அருகில் அமைந்துள்ளது.
இதை அறிந்து கொண்ட கோட்சே தலைமையிலான 20 பேர் கும்பல் காந்தியடிகளை கொல்ல முயற்சி செய்தது. கையில் கொடூர ஆயுதத்துடன் காந்தியை திட்டிக் கொண்டே கொல்ல முயற்சிக்க, கோட்சே தடுக்கப்பட்டான். அவனை சுற்றியுள்ளவர்கள் அடிக்க, இடையில் தடுத்து அவரை மன்னித்துவிட்டார் காந்தியடிகள். பிந்நாளில் இந்த கோட்சே எனும் கொலைகாரன்தான் மகாத்மாவின் இன்னுயிரை பறித்தான்.
சேவகிராம்
1944ம் ஆண்டு மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னாவோட ஒரே மேடையில் தோன்றும் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். இதனை எதிரிகள் தெரிந்துகொண்டு அவரை கொல்ல முயற்சி செய்தனர். சேவகிராமத்திலிருந்து பாம்பேக்கு சென்ற காந்தியை கொல்ல முயற்சி செய்தது கோட்சேவின் படை. பின்னர் அங்கு மகாத்மாவை காண வந்திருந்த மக்களால் கோட்சே செருப்படி வாங்கி திரும்பி சென்றான். இதை டாக்டர் சுசிலா என்பவர் பின்னாளில் தெரியப்படுத்தினார்.
புனே ரயிலில்
1946ம் ஆண்டு புனே செல்லும் ரயிலில் நேருல் மற்றும் கர்ஜத் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காந்தியை கொல்ல திட்டமிட்டிருந்தார்கள் எதிரிகள். ஆனால் நல்லவேளை அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது. வெறும் என்ஜினோட அந்த பாதிப்பு நின்றுவிட்டது. ரயிலை செலுத்தியவர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்திவிட்டதால் பெரும்பாலும் யாருக்கும் பாதிப்பில்லாமல் ஆனது.
பிர்லா பவன்
1948ம் ஆண்டு, காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர், 5வது முறையாக கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நாதுராம் கோட்சே, இந்த முறை வேறு சில நபர்களோட காந்தியை கொல்ல முயற்சிக்க, இறுதியில் தோற்றுப் போயினர். இதே திட்டத்தின்படிதான், அடுத்த முறை கோட்சே காந்தியை கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.