ஆப்நகரம்

வண்டலூருக்கு இனி மெட்ரோல போகலாம்! எப்டினு கேக்குறீங்களா?

சென்னை சுற்றுலாத் தளங்களில் முக்கியமான வண்டலூருக்கு மெட்ரோ ரயிலில் சுற்றுலா செல்வோம் வாருங்கள்.. இப்ப இல்ல வருங்காலத்துல...

Samayam Tamil 13 Nov 2019, 4:04 pm
சென்னை சிங்காரச் சென்னையா மாறுனதுல இருந்து டிஜிட்டல் மயமாவும், கட்டிடங்கள் பல உயரமாவும் வளர்ந்துட்டே இருக்கு. இதனால சென்னைக்கு வர்ற மக்களோட எண்ணிக்கையும் அதிகரிக்குறதா புள்ளிவிவரங்கள் குறிப்பிடுது. மக்கள் தொகை அதிகமாக அதிகமாக போக்குவரத்துக்கான வசதிகள் குறையும். இதனால நாம பல முன்னேற்பாடுகள செய்யணும். வேலை நிமித்தமா சென்னைக்கு வர்றவங்களுக்கும் அசதி ஆனா சுற்றுலா போகுணும்னு எண்ணங்கள் வரும். ஆனா கிளம்பி திரும்பி வர்றதுக்குள்ள இரவு ஆய்டும், அதிக கூட்ட நெரிசல சமாளிச்சி எப்டி போய்ட்டு வர்றதுனு அந்த திட்டத்தையே கேன்சல் பண்ணிடுவாரு. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாயிட்டே இருக்க, அதுக்கு ஒரு தீர்வு காண கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம். சரி அந்த மெட்ரோ ரயில் மூலமா வண்டலூருக்கும் இனி பயணிக்கலாம் தெரியுமா?
Samayam Tamil metro rail to vandalur zoo in future will make the trip more easy
வண்டலூருக்கு இனி மெட்ரோல போகலாம்! எப்டினு கேக்குறீங்களா?


அட விசயமே தெரியாதா.. சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தளங்கள்ல ஒன்றான வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வருது. ஊரப்பாக்கம் வரைக்கும் இந்த வழித்தடத்துல ரயில்கள் நீட்டிப்பு செய்யப்படுகின்றன.

சென்னை விமான நிலையம் வரை தற்போதைய மெட்ரோ வழித்தடம் இருக்கிறது. இது நீட்டிக்கப்பட்ட ஊரப்பாக்கம் அருகிலுள்ள கீழம்பாக்கம் வரை செயல்படுத்தப்பட உள்ளது.

சரி.. விமான நிலையத்துல இருந்து வண்டலூர் வரைக்கும் நிறுத்தங்கள் என்னென்ன இருக்கு. வாங்க பாக்கலாம்.

பல்லாவரம்

குரோம்பேட்டை

திருவிக நகர்

தாம்பரம்

இரும்புலியூர்

பெருங்களத்தூர்

வண்டலூர் ஆகிய இடங்கள் நிறுத்தங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி

பல்லாவரம் பகுதியிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த செம்பரம்பாக்கம் ஏரி.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்துதான் அடையாறு நதி பிறக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பெரிய ஏரி இதுவாகும். இதன் கரை 9 கிமீ நீளம் கொண்டது. 500 ஆண்டுகள் பழமையான ஏரியாகும்.




வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சென்னையின் முக்கியமான சுற்றுலாத் தளமாகும். விடுமுறையை கழிக்க பல சுற்றுலா பயணிகள் இங்குதான் வருகை தருகிறார்கள். குழந்தைகளோடு குடும்பமாக இங்கு வருகை தரும் மக்கள் சுற்றுலாவை அதிக அளவில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா தென்னாசியாவின் மிகப் பெரிய பூங்கா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

தாம்பரத்திலிருந்து 6 கிமீ மற்றும் சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் 1675 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. நீர் யானை, வெள்ளைப் புலிகள், சிங்க வால் குரங்கு, நீள வால் குரங்கு, மனித குரங்கு, புள்ளி மான், இமாலய கறுப்பு கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலில்லா குரங்கு என கண்டுகளிக்க பல இடங்கள் இருக்கின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கிஷ்கிந்தா கேளிக்கை பூங்கா

வண்டலூர் காடுகள்

பெருங்களத்தூர் ஏரி

அடுத்த செய்தி