ஆப்நகரம்

Maha Puyal : எப்படி இருந்த சுற்றுலாத் தளங்கள் மழையால் இப்ப இப்படி ஆய்டிச்சி பாருங்க!

மழையால் ஊட்டி சாலைகளின் நிலை

Samayam Tamil 31 Oct 2019, 6:26 pm
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருவதுடன் சில குறிப்பிட்ட இடங்களில் அதிக அளவு மழைப் பொழிவும் இருக்கிறது. மிக முக்கியமாக கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அடி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது மழை. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மழையை வரவேற்கின்றனர்.
Samayam Tamil ooty rain photos


நீலகிரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மழை இரண்டு மூன்று நாட்களாக பின்னி பெடலடத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெள்ள நீர் உட்புகுந்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

ஊட்டி, குன்னூர், குந்தா ஆகிய பகுதிகளில் மழையின் பாதிப்பு பரவலாக தெரிகிறது குன்னூர் குந்தா பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்ட மலைப் பாதைகளில் சாலைகளில் மரங்களும் பாறைகளும் சரிந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பை உண்டாக்கியுள்ளன. ராட்சத மரங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கும் போதே மரங்கள் விழுவதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் பயத்துடன் பயணித்து வருகின்றனர்.

நீலகிரி சுற்றுலாவும் மழையின் அழகும்

மழை அளவு வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றே தெரிகிறது. தற்போதுள்ள சூழலில் நீலகிரியில் காண வேண்டிய தளங்களான குன்னூர், கோத்தகிரி, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து மிக குறைவாகவே உள்ளது. ஏற்கனவே குளிரும், இப்போது மழையும் கூடவே பனியும் சேர்ந்து கொண்டுள்ளது.

அடுத்த செய்தி