ஆப்நகரம்

Thalapathy : பிகில் படம் எடுக்கப்பட்டது இப்படி ஒரு இடத்துலயா?

பிகில் திரைப்படம் எடுக்கப்பட்ட இடம் இப்படி ஒரு இடத்தில் இருக்கிறதா? அந்த அடையாளமே தெரியாமல் சும்மா புகுந்து விளையாடியிருக்காங்க கேமரால

Samayam Tamil 26 Oct 2019, 3:10 pm
பிகில்... பிகில்.. பிகில்.. எங்க பாத்தாலும் எப்படி கேட்டாலும் காதுல வந்து விழுகுறது இந்த வார்த்தைதான். ஆமாம் இந்த படம் எங்க எடுத்தாங்க? சென்னை உள்ளிட்ட இடங்கள்லதான் இல்லியா? இந்த படத்தோட முக்கியமான காட்சிகள் சென்னையோட குறிப்பிட்ட ஒரு இடத்துல எடுக்கப்பட்டிருக்கு.. அங்கதா இப்ப போகப்போறோம் வாங்க.
Samayam Tamil bigil review audience


செங்குன்றம்


சென்னை மாநகரத்தின் வடமேற்கு திசையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த செங்குன்றம். புழல் நீர் தேக்கத்தின் கரையில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறிய நகரம்தான் இந்த "செங்குன்றம்". இங்குதான் உள்ளது செங்குன்றம் ஏரி. இது ஒரு அருமையான இடம்.

இயற்கை அமைப்பு


செங்குன்றம் என்ற பெயரே இந்த நகரத்துக்கு இயற்கையிலேயே அமைந்த கொடை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எந்த காரணத்துக்காக செங்குன்றம் எனும் பெயர் வந்ததோ அந்த பெயரே மறக்கும் அளவுக்கு இதன் அடையாளமான செம்மண் குன்றுகள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டு விட்டது.

எஞ்சியிருப்பது புழல் நீர்த்தேக்கம் ஒன்று மட்டும்தான். இதன் அருகில்தான் பிரபல தமிழ் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் சூட்டிங் உள்பட பல படங்கள் செட் போடப்பட்டு எடுக்கப்படுகின்றன. புளியமரங்களும், விவசாய பகுதிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது.

போக்குவரத்து வசதிகள்


சில தனியார் பேருந்து போக்குவரத்து சேவையும் செங்குன்றத்தை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் - நெல்லூர், புத்தூர், திருப்பதி, திருமலை, திருக்காளத்தி, ஐதிராபாத் ஆகிய பகுதிகளையும் சாலை வழியாக இணைக்கிறது.

அருகிலுள்ள ரயில் நிலையம் பெரம்பூர் ரயில் நிலையம் ஆகும். சென்னை விமான நிலையம் இங்கு அருகிலுள்ள விமான நிலையம் ஆகும்.

புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி


புழல் அல்லது செங்குன்றம் எனும் பெயரில் அழைக்கப்படும் ஏரியானது சென்னையின் குடிநீர் தேவைக்காக இருக்கும் ஒரு அழகிய ஏரி ஆகும். இங்கு காண்பதற்கு பெரிய அளவில் சுற்றுலா அம்சங்கள் இல்லை என பொதுமக்கள் கருதினாலும், இதன் அழகு பலரை கட்டாயம் ஈர்க்கக் கூடியது. இதன் அருகில் அழகிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி