ஆப்நகரம்

Thanjai Periya Kovil : பெரிய கோவிலில் 1997ல் நடந்தது என்ன ? 23 வருடங்களாக குடமுழுக்கு நடக்காததற்கு என்ன காரணம்?

தமிழர்களின் வீரத்துக்கும், கட்டிடக்கலைக்கும் மிகப் பெரிய உதாரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் அமைந்திருக்கும் ஒரு இடம் என்றால் அது பெரிய கோவில்தான். பெரிய கோவிலில் கடைசியாக 23 வருடங்களுக்கு முன்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Samayam Tamil 28 Jan 2020, 4:58 pm
தமிழர்களின் வீரத்துக்கும், கட்டிடக்கலைக்கும் மிகப் பெரிய உதாரணமாக தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் அமைந்திருக்கும் ஒரு இடம் என்றால் அது பெரிய கோவில்தான். பெரிய கோவிலில் கடைசியாக 23 வருடங்களுக்கு முன்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. தமிழ், சமக்கிருத சண்டைகள் ஒரு பக்கம் இருக்க, இத்தனை ஆண்டு காலம் ஏன் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்று பலர் கேட்கின்றனர். அதற்கான பதிலை தேடும் முன்னர், இன்னொரு விசயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் 1997ம் ஆண்டு நடந்த மாபெரும் குடமுழுக்கு நிகழ்வில் நிகழ்ந்த ஒரு தீ விபத்து.
Samayam Tamil tanjavur big temple
PC: Sri Ram


1997ம் ஆண்டு, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் என்று பலரால் அழைக்கப்படும் பெரிய கோவிலில் குட முழுக்கு நிகழ்வு நடந்தேறியது. அப்போது தமிழ் ஆகம விதிகளின் படியும், சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டும்தான் இந்த குடமுழுக்கு நடந்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். அரசின் தகவல்களின்படியும், அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எப்படி 1997ம் ஆண்டு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகள் இணைந்து இந்த குடமுழுக்கு நடந்ததோ அது போலவேத் தான் இந்த முறையும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு விசயம் என்னவென்றால் அது தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்குதான். தமிழனால் தமிழர்களுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் சமஸ்கிருதம் எதற்கு என தமிழ் அன்பர்களும், சமஸ்கிருத மொழியில்தான் காலம் காலமாக பூசைகள் செய்யப்பட்டு வந்துள்ளன அதுதான் நியாயம் என ஒரு சிலரும் கூறி வருவதால் இந்த நிகழ்வுக்கு எதிர் பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கிபி 1006ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் ராசராசன் இந்த பெரிய கோவிலை கட்டியுள்ளார். 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த கோவிலின் கட்டிடக் கலை உலகம் போற்றும் அளவு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. உலகம் முழுவதுமிருந்தும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு வந்து இதன் அழகில் பிரம்மாண்டத்தில் பிரம்மித்து இருக்கிறார்கள்.

1997ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் குடமுழுக்கு நடை பெற்றது. அப்போது ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட அதில் 48 பேர் உயிரிழந்தனர். 200க்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து 23 ஆண்டுகளாக கோவிலில் குடமுழுக்கு நடைபெறவில்லை.

எப்போது குடமுழுக்கு?

வரும் பிப்ரவரி 5ம் தேதி தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடை பெறும் என்று திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொழி

குடமுழுக்கு நடைபெறுவதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர், பக்தர்கள் உள்ளிட்ட தமிழ் நல விரும்பிகள் கேட்கின்றனர்.

அடுத்த செய்தி