ஆப்நகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடகா - தமிழக எல்லைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Samayam Tamil 16 May 2018, 1:39 pm
கர்நாடகா - தமிழக எல்லைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Samayam Tamil p1040139
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரிப்பு!


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று முன்தினம் 1900 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று சற்று சரிந்து 1600 கனஅடியாக குறைந்தது. இந்த நிலையில் கர்நாடக-தமிழக எல்லைபகுதியான அஞ்சசெட்டி, உலுக்கானபள்ளி, நட்டாறம்பாளையம், கிகேரெட்டி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது அங்குவரும் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி