ஆப்நகரம்

இந்த இடங்களுக்கு எல்லாம் 30 வயதிற்குள் சென்று வந்தால் வாழ்க்கை அமோகமாக இருக்கும்..!

இந்தியாவில் சுற்றுலா செல்வதற்கான பல இடங்கள் உள்ளன. அவற்றின் முப்பது வயதிற்குள் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும், அதிலுள்ள சிறப்புகளை குறித்தும் பார்க்கலாம்.

Samayam Tamil 8 Jul 2019, 12:59 pm
தலைப்பை படித்த பிறகு சுற்றுலாவுக்கும், வயதிற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்; ஒரு காலத்தில் குடும்ப பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள் ஆகியவற்றை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை இருந்து வந்தது.
Samayam Tamil 30 வயதிற்குள் இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்
30 வயதிற்குள் இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்


ஆனால், தற்போது தனிநபருக்கான பொறுப்புகள் என்பது னிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் அதிகரித்து விட்டது. பொறுப்பு என்ற பெயரில், கூடுதல் சுமைகளும் திணிக்கப்படுகின்றன.

இதனால் ஒருவர் தனக்காக தேவையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்க எண்ணும் போது அவருக்கு வயது 30 ஆகிவிடுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை வாழ்க்கையிலும் 30 என்பது உயர்வைத் தரும் வயதாக அமைகிறது.

அப்போது தான், அவர்கள் மீது கூடுதல் சுமையும் ஏறுகிறது. அதனால் அவர்களுக்கு மனதை ஆசுவாசப்படுத்தவும், அமைதிக் கொள்ளவும் தேவை எழுகிறது. இதற்கு பலரும் தேர்ந்தெடுக்கும் தீர்வு தான் சுற்றுலா. 30 வயதை நெருங்குவோருக்கு சுற்றுலா ஒரு தவம் என்றே சொல்லலாம்.

அவ்வாறு 30 வயதை நெருங்குபவர்கள், அல்லது 30 வயதில் இருப்பவர்கள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். பொறுப்புகள் உங்கள் முதுகில் மீது ஏறும் முன்பு இந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்து வாருங்கள்.

கோவா
இந்தியாவில் எப்போது ஜெகஜோதியாய் இருக்கும் கடற்கரைகளை உள்ளடக்கிய மாநிலம் தான் கோவா. இந்திய, போர்த்துகீசிய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. இரவுக் கொண்டாட்டங்கள், மது வகைகள், கடற்கரை சுற்றுலா, கண்கவர் நிகழ்வுகள் என வாழ்வில் மறக்க முடியாத இன்பங்களை தன்னுள்ள் அடக்கியுள்ள இடம் தான் கோவா.

ஸ்ரீநகர்
20 வயதுகளின் இறுதியில் நீங்கள் இருந்தால், நீங்கள் அடுத்துச் செல்ல வேண்டிய இடம் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர். பூமியில் இருக்கும் சொர்க்கமாக கருதப்படுகிறது ஸ்ரீநகர். இந்தியாவில் பழமையான, அதேசமயத்தில் பல புதுமையான கட்டமைப்புகள் ஒருங்கே பெற்ற நகரம் தான் ஸ்ரீநகர்.

அந்தமான்
தண்ணீருக்கு அச்சப்படுபவர்கள், நீச்சல் தெரியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய அனுபவத்தை தருவதற்காக இயற்கை உருவாக்கிய இடம் தான் அந்தமான். இங்கு ஆழ்கடலுக்குள் காணப்படும் வனப்பு காண்போரை பரவசமடையச் செய்யும். ஒருமுறை சென்றுவிட்டால், மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் பல அழகிய கடற்கரைகளை கொண்ட பகுதி தான் அந்தமான்.

லடாக்
தொலைதூர பயணங்களை விரும்புபம் பெரும்பாலானோரின் பட்டியலில் முதல் தேர்வாக இருக்கும் இடம் தான் லடாக். சொர்க்கமே பூமிக்கு தரையிறங்கி வந்தது போன்று, மேகங்களுக்கு இடையிலும், நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியிலும் இருக்கிறது லடாக்.

காசி
சுற்றுலா செல்லும் இடங்களுக்கான பட்டியலில் எதற்காக காட்சி இடம்பெற்றது என்று உங்களுக்கு தோன்றலாம், ஆனால் மூப்பது வயதை எட்டுவதற்குள் பார்க்க வேண்டிய இடங்களில் காசிக்கும் முக்கிய பங்குள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் வாரணாசி ஆரத்தி திருவிழா, படகு சவாரி, திருத்தலங்கள் என மனிதமும் ஆன்மிகமும் சங்கமிக்கும் இடம் தான் காசி.

மும்பை
தமிழகத்தின் தூங்கா நகரம் என்றால், பலரும் மதுரையை குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தியாவில் தூங்கா நகரம் என்ற சிறப்பை பெற்றது மும்பை தான். இரவு நேர பயணங்கள், சாலையோர கடை உணவுகள், மலிவு விலையிலான பர்ச்சேசிங், டிஸ்கோ, சிற்றுண்டி என ஆனந்தமான அனுபவங்களை தரும் மும்பை 30 வயதிற்குள் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.

கூர்க்
காட்டுப் பாதைக்குள் பயணம் செல்வதை வரும்பாதவர்களே இருக்க முடியாது. அமைதியான சூழ்நிலை, எங்கோ கத்தும் குயிலின் ஓசை, உயரமான மரங்களுக்கு இடையில் அமையும் தனிமையான பொழுது பலருக்கும் நீங்கா நினைவுகளை தரும். 30 வயதை அடையும் முன்பு அனைவரும் செல்ல வேண்டிய மற்றொரு இடம் தான் கூர்க். பெங்களூருவில் இருந்து விரைவாக சென்று திரும்பிவிடலாம். தமிழகத்தில் இருந்து செல்பவர்களுக்கு கூர்க் மிகவும் அருகில் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.

கொல்கத்தா
நவராத்திரி அன்று நடைபெறும் துர்கா பூஜை தான் கொல்கத்தா விழாக் கோலம் பூண்டும். வங்காளத்தின் கலாச்சாரத்தை இந்த பண்டிகையின் போது நாம் காணலாம். துர்கா பூஜைக்காக கொல்கத்தா பெண்கள் வெள்ளை உடை உடுத்தி, அம்மாநிலத்தையே அதிரவைப்பார்கள். துர்காவை வழிபடும் திருவிழாவின் போது அதை நாம் பார்த்தால் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அடுத்த செய்தி