ஆப்நகரம்

சென்னையில் நாளை சா்வதேச பலூன் திருவிழா

சென்னை லயோலா கல்லூாி வளாகத்தில் நாளை சா்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 6 நாடுகளை சோ்ந்த பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.

Samayam Tamil 4 Jan 2018, 10:28 pm
சென்னை லயோலா கல்லூாி வளாகத்தில் நாளை சா்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதில் 6 நாடுகளை சோ்ந்த பலூன்கள் பறக்கவிடப்படுகின்றன.
Samayam Tamil international balloon festival in chennai
சென்னையில் நாளை சா்வதேச பலூன் திருவிழா


உலகம் முழுவதிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் பலூன் திருவிழா, பலூன் பறக்கவிடும் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் சா்வதேச பலூன் திருவிழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் அமெரிக்கா, போலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம் உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பங்கேற்கின்றன. இந்த விழாவில் லயோலா கல்லூாி முதல்வா், சுற்றுலாத்துறை அதிகாாிகள் என பலா் கலந்துகொள்ள உள்ளனா்.

மேலும் இந்த விழாவில் நடிகா் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் பலூனும் பறக்க உள்ளது. இது தொடா்பாக விழாக் குழுவினா் கூறுகையில், பலூன் திருவிழாக்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். ஆனால் தமிழகத்தில் புதிய முயற்சியாக இதை நடத்துகிறோம். மாநில சுற்றுலாத் துறையின் ஆதரவு கிடைத்தது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி