ஆப்நகரம்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்களை காண கொடைக்கானலில் குவியும் சுற்றுலாவாசிகள்

கொடைக்கானலில் புகழ்பெற்ற நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து கொடைக்கானலில் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 12 Jul 2018, 5:37 pm
கொடைக்கானலில் புகழ்பெற்ற நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து கொடைக்கானலில் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil nella kurinji malar kodaikanal
சுற்றுலாவாசிகளை கவர்ந்து வரும் கொடைக்கானல் நீல குறிஞ்சி மலர்கள்


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதி முழுவதிலும் எங்கு பார்த்தாலும் நீல குறிஞ்சி செடிகள் முளைத்து வளர்ந்திருக்கும். இந்த வகை செடிகள் அப்பகுதிக்கு ஒரு தனி அடையாளம் என்றே சொல்லலாம்.

உலகளவில் சுமார் 450க்கும் மேற்பட்ட வகையில் குறிஞ்சி மலர்கள் உள்ளன. அதில் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் சுமார் 59 வகையான குறிஞ்சி மலர்கள் இருக்கின்றன.

கொடைக்கானலில் பசுமையான புல்வெளிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் காணப்படும் குறிஞ்சி செடியிலிருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு பூக்கள் பூத்துள்ளன. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

தவிர, அட்டகாசமான நீல நிறத்தில் காணப்படும் குறிஞ்சிப்பூக்கள் தேனீக்களை பெரிதும் ஈர்த்து வருகிறது. இதனால் நீல குறிஞ்சி செடிகளுக்கு இடையில் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் எங்கு பார்த்தாலும் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம கோடை விழாவை விரைந்து நடத்த பலரும் கோரிக்கைகள் எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி