ஆப்நகரம்

கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கிய மலர்க்கண்காட்சி

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் இன்று முதல் மலர்க்கண்டாட்சி தொடங்கியுள்ளது. இதில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர்களால் ஆன உருவ மாதிரிகள் காட்சிக்கு வைக்கபப்ட்டுள்ளன.

Samayam Tamil 30 May 2019, 8:08 pm
கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், மலர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் நாரினியா மனிதன் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
Samayam Tamil கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி


தமிழகத்தில் கோடைக் காலத்தின் போது மலைப்பிரதேசங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சிகளில் தேசியளவில் பிரபலமானவை. ஊட்டி மலர் கண்காட்சி மற்றும் ஏற்காடு மலர் கண்காட்சியை தொடர்ந்து தற்போது கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதில் கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளை கொய்மலர்களால் 10 அடி நீளம், 8 அடி உயரம் கொண்ட வெள்ளை மயில் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

தவிர, கொடைக்கானல் பூங்காவிலுள்ள அஸ்டோமியா, கிங் ஆஸ்டர், சைப்ரஸ், வெள்ளை கொய்மலர் போன்ற மலர்களை வைத்து செடிகளின் துணை கொண்டு நார்னியா மனித உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் சுற்றுலா பயணிகள், வெள்ளை மயில் மற்றும் நார்னியா மனிதன் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தவிர, இந்த கண்காட்சியில் கிளி, நந்தி, ஒட்டகச்சிவிங்கி, புகைப்பட பிரேம் உள்ளிட்டவற்றின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் லட்சக்கணககன வண்ண வண்ண மலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

அடுத்த செய்தி