ஆப்நகரம்

நிறம் மாறும் மெக்சிகோ கடற்கரையால் அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்

மெக்சிகோவில் உள்ள கடற்கரை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jun 2019, 8:04 pm
மெக்சிகோவிலேயே மிகவும் பிரபலமானது பீச். மெகிச்கோ சிட்டிக்கு மிகவும் அருகில் உள்ள இதற்கு காரில் சென்றால் 18 முதல் 19 மணி நேரப் பயணம் தான் ஆகும். இந்த கடற்கரையில் அழகை ரசிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கம்.
Samayam Tamil பழுப்பு நிறத்தில் மாறும் மெக்சிகோ கடற்கரை- கவலையில் மக்கள்
பழுப்பு நிறத்தில் மாறும் மெக்சிகோ கடற்கரை- கவலையில் மக்கள்


அமைதியான அலையோசை, நீளமான பாதை, அழகான மணற்பரப்பு என இயற்கையின் வருணனையில் அமைந்துள்ளது மெக்சிகென் கடற்கரை. பலரையும் வசீகரித்து வந்த இந்த கடற்கரை தற்போது பழுப்பு நிறமாக மாறிவருகிறது. தவிர, கடலில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கடற்பாசி, கடல் பகுதியைப் பழுப்பு நிறமாக மாறி வருகிறது. இது சூழலலியல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

உலக வெப்பமயமாதலே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ரசாயன உரம் கடலில் கலப்பதாலும், கடலடி நீரோட்டம் காரனமாகவும் கடற்பாசிப் படலங்கள் உருவாகிக் கரைக்கு வருகின்றன. அமேசான் நதிக்கு அப்பாலுள்ள அட்லாண்டிக் வெப்பமண்டலக் கடற்பகுதியிலிருந்து அவை மெக்சிகோவுக்கு அடித்துவரப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வளவு கடற்பாசி கரைக்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என விலங்கின ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால், அது எங்கே எப்போது கரையொதுங்கும் என்பதை கணிப்பது அவ்வளவு எளிதல்ல. அழகையும் அமைதியையும் தேடி வரும் சுற்றுலா பயணிகளை இந்த கடற்பாசிகள் முகம் சுழிக்க வைக்கின்றனர். இந்த செய்தி மெக்சிகோ கடற்கரையில் அமர்ந்து இயற்கையே ரசித்துக் கொண்டு பிகினி உடையில் போஸ் கொடுக்கும் ஹனிமூன் கோடிகளுக்கு இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி