ஆப்நகரம்

இந்த நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டாம்! ஆதார் மட்டும் போதும்!

இதற்கு முன்பு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் இந்த இரு நாடுகளுக்குச் செல்லும்போது ஆதாரை அடையாளச் சான்றாக பயன்படுத்த அனுமதி கிடையாது.

Samayam Tamil 20 Jan 2019, 4:05 pm

ஹைலைட்ஸ்:

  • குறிப்பிட்ட வயதினர் நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்.
  • அல்லது பாஸ்போர்ட் மற்றும் அரசின் ஏதேனும்புகைப்பட அடையாள அட்டை போதும்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil aadhar-image-8
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடான் ஆகியவற்றுக்கு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் ஆதார் அட்டையை மட்டுமே வைத்துக்கொண்டு பயணிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல இந்த குறிப்பிட்ட இரு வயது வரம்புகளுக்குள் உள்ளவர்கள் விசா இல்லாமலே, ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தலாம்.

இதேபோல பாஸ்போர்ட் மற்றும் இந்திய அரசின் ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஆகியவற்றை வைத்திருக்கும் இந்தியர்கள் இந்த இரு நாடுகளுக்கும் செல்ல விசா தேவையில்லை.

இதற்கு முன்பு 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களும் 65 வயதுக்கு உட்பட்ட முதியவர்களும் இந்த இரு நாடுகளுக்குச் செல்லும்போது ஆதாரை அடையாளச் சான்றாக பயன்படுத்த அனுமதி கிடையாது. பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய அரசு வழங்கும் சுகாதார சேவை அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டை அடையாளச் சான்றாகக் காட்ட வேண்டிய நிலை இருந்தது.

அடுத்த செய்தி