ஆப்நகரம்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

TNN 8 Mar 2017, 7:55 pm
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
Samayam Tamil national highway closed in kashmir as snowfall rain continues for 2nd day
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலை மூடல்


அம்மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக, கடும் பனிப்பொழிவு பொதுமக்களை வாட்டி வருகிறது. அத்துடன், சில இடங்களில் மழையும் பெய்வதால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள பனிக்கட்டிகள் காரணமாக, போக்குவரத்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலைகளில் உறைந்து கிடக்கும் பனிப்புதைவு காரணமாக, என்ஹெச் 44 வழித்தடம் மூடப்பட்டுள்ளது. இதன்படி, ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மேற்கொள்ள முடியாது. இதனால், பல இடங்களில் வாகனங்கள் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

திக்டால், பந்த்யால், அனாகிஃபால், பேட்டரி சாஸ்மா உள்ளிட்ட 300 கிலோமீட்டர் தொலைவு நெடுஞ்சாலையில் கடும் பனிப்புதைவு காணப்படுகிறது. பெரும் உயிர்ச்சேதம் நிகழ்வதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை மூடப்படுவதாக, எல்லைப்புற சாலைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Cold wave conditions were on Wednesday renewed in Kashmir Valley as intermittent snowfall and rains lashed some parts for the second day, prompting authorities to suspend traffic on Srinagar-Jammu National Highway.

அடுத்த செய்தி