ஆப்நகரம்

Gandhi Jayanti 2018: வாழ்வில் ஒருமுறையாவது கண்டிப்பாக பார்க்க வேண்டிய காந்தியின் நினைவு இடங்கள்!

காந்தியின் அகிம்சையையும், புனிதத்தையும் வெளிப்படுத்தும் தலங்களை காணலாம்

Samayam Tamil 1 Oct 2018, 4:28 pm
தேசம் முழுவதும் காந்தி ஜெயந்தி நாளை (அக்டோபர் 2ம் தேதி) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இங்கு காந்தியின் அகிம்சையையும், புனிதத்தையும் வெளிப்படுத்தும் நினைவு இடங்களை காணலாம். இந்த இடங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் சென்றால் போதும். மகாத்மாவின் பெருமைகளை உணர முடியும்
Samayam Tamil 7-Birla-Bhavan


1.சபர்மதி ஆசிரமம், அகமதாபாத்

காந்தியின் ஆசிரமம் என்று அழைக்கப்படும் சபர்மதி ஆசிரமம், அகமதாபாத் நகரின் மண்டபத்திலிருந்து 5 கிமீ தொலைவில், சபர்மதி ஆற்றின் அருகே உள்ளது. 1918ம் ஆண்டு முதல் 1933 ம் ஆண்டு வரையில் மகாத்மா காந்தி இங்கு தான் தங்கியிருந்தார்.

2. காந்திகிராமம்

மகராஷ்டிரா மாநிலம் வர்தா நகரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது சேவாகிராமம். கிராமமே நாட்டின் முதுகெலும்பு. கிராமத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி 1934 - 1940 காலக்கட்டங்களில் இங்கு தான் சேவை செய்தார்.

3. மணிபவன் காந்தி சங்கராலாயா, மும்பை

பரபரப்பாக இருக்கும் மும்பை நகரின் நடுவே ஓர் அமைதி நிலையம் தான் மணிபவன் காந்தி சங்கராலயா.1917-1934 காலக்கட்டங்களில் காந்தி மும்பை வந்தபோது, இந்த மணிபவனில் தான் தங்கியிருந்து சமூகசேவை புரிந்தார். தற்போது இது காந்தியின் நூலகமாகவும், அருங்காட்சியமாகவும் உள்ளது

4.கீர்த்தி மந்திர், போர்பந்தர்

மகாத்மா காந்தி பிறந்த இடம் தான் இது. பின்னாளில் கீர்த்தி மந்திர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது காந்தியின் அருங்காட்சியகமாக இது செயல்படுகிறது. இங்கு காந்தி எழுதிய நூல்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

5. ஆகா கான் அரண்மனை

மகராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ளது ஆகா கான் அரண்மனை. 1892ம் ஆண்டு சுல்தான் மூன்றாம் முகமது ஷா ஆகா கான் என்பவர் இந்த அரண்மனையை கட்டியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, காந்தி பலமுறை கைது செய்யப்பட்டு, இங்கு தான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

5. காந்தி அருங்காட்சியகம்,மதுரை
காந்தியின் நினைவாக 1959ம் ஆண்டு மதுரையில் காந்தி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இரத்தக் கறை படிந்த அவரது மேல்துண்டு இங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

7. காந்தி சமிதி
பிர்லா மாளிகை எனப்படும் காந்தி சமிதி,டெல்லியில் அமைந்துள்ளது. காந்தி தனது இறுதிவாழ்நாளை இங்கு தான் கழித்தார். 1973ம் ஆண்டு முதல் இந்த இடம் பொதுமக்களின் பார்வைக்காக, காந்தி நினைவு இல்லமாக திறந்துவிடப்பட்டது

அடுத்த செய்தி