ஆப்நகரம்

தாஜ்மஹாலை இடித்துவிடுங்கள்: உச்ச நீதிமன்றம் காட்டம்

மத்திய அரசு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்துத் தள்ளிவிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 3:44 pm
மத்திய அரசு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்துத் தள்ளிவிடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Samayam Tamil PTI5_26_2018_000034B


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மத்திய அரசு உரிய முறையில் பாதுகாக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் தொல்பொருள் ஆய்வுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு இதுவரை பல உத்தரவுகள் பிறக்கப்பட்டும் அவை செயல்படுத்தவில்லை. ஆனால், தாஜ் காரிடார் என்ற பெயரில் அந்த பகுதியில் தொழிற்சாலைகளை அதிகமாக அனுமதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “உலகின் பொக்கிஷங்களில் ஒன்று தாஜ்மஹால். இதைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் ஏராளமான அந்நியச் செலவாணியை மத்திய அரசு ஈட்டுகிறது. பிற நாடுகள் உலக அதிசயங்களைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கின்றன. தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது உலகம் முழுவதுக்குமே இழப்புதான். இதனை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால், அதனை மூடி விடலாம் அல்லது இடித்துத் தள்ளிவிடலாம்.” என்று கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி