ஆப்நகரம்

Jallikattu 2020 : வீரத் தமிழர்களே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அரசே உங்கள கூட்டி போகுது!

வெறும் ஜல்லிக் கட்டு காண மட்டுமா இல்லை இல்லை.. நீங்கள் 3 நாள் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறீர்கள்.

Samayam Tamil 6 Jan 2020, 3:49 pm
வீரத் தமிழர்களே.. ஜல்லிக் கட்டை காண உங்களுக்கு இப்படி ஒரு அரிய வாய்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் அரசே உங்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளது. வெறும் ஜல்லிக் கட்டு காண மட்டுமா இல்லை இல்லை.. நீங்கள் 3 நாள் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறீர்கள்.
Samayam Tamil Madurai-alanganallur-jallikattu
PC: Iamkarna'Iamkarna'


16 ஜனவரி 2020 முதல் 19 ஜனவரி 2020 அதிகாலை வரை இந்த சுற்றுலா நிகழ இருக்கிறது. நீங்கள் இதற்கான முன்பதிவை செய்து பயன்பெற முடியும்.

சுற்றுலாத் திட்டம்

பொங்கல் விழாவைத் தொடர்ந்து நடைபெறும் ஜல்லிக் கட்டுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படவிருக்கிறார்கள். ஏற்கக் கூடிய கட்டணத்தில் சுற்றுலாத் துறை பேருந்தில் நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

பொங்கலுக்கு மறுநாள் 16ம் தேதி இரவு 9 மணிக்கு , திருவல்லிக் கேணி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து பேருந்து புறப்படுகிறது.

  • 17ம் தேதி அதிகாலை மதுரையை அடையும்

  • காலை உணவிற்கு பிறகு பேருந்து அலங்காநல்லூருக்கு செல்லும்.

  • ஜல்லிக் கட்டு போட்டிகளை காண உங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

  • ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு, அன்றைய தினம் இரவு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.

  • மறுநாள் காலை முதல் இரவு வரை மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை காண நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.


எங்கெல்லாம் அழைத்துச் செல்லப்படுவீர்கள்

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

  • திருமலை நாயக்கர் மஹால்

  • காந்தி அருங்காட்சியகம்

  • அழகர் கோவில்


கட்டண விவரங்கள்

  • பெரியவர்களுக்கு கட்டணம் - ரூ 4300

  • சிறியவர்களுக்கு கட்டணம் - ரூ 3450

  • குளிர் சாதன அறை வசதி வேண்டுவோர் கட்டணம் - ரூ 4500

மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்று முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

அடுத்த செய்தி